districts

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை விவாதிக்க அனுமதியளித்திடுக!

மதுரை, ஜூலை 26- மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பற்றி  விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்றக்குழு தலைவர் என்.விஜயா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு: மதுரை மாநகராட்சியில் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் கள் தங்களுடைய பகுதி மக்கள் கோரிக்கைகளை பேச அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாமன்ற  கூட்டத்தை மேயர் முறையாக கூட்டி யும் ஒருமுறை கூட கூட்டம் முறை யாக முடிந்ததில்லை. இது ஜன நாயகத்தின் குரலை நெரிக்கும் போக்காக உள்ளது. தொடர்ந்து  மாநகராட்சி கூட்டம் நடத்தப்படும்  தேதி என்பது கூட்டம் நடத்துவதற்கு முதல் நாள் தான் அறிவிக்கப்படு கிறது. தொடர்ந்து மாமன்ற கூட்டத்  தில் நிறைவேற்றப்படும் கூட்ட  பொருள் குறித்த தொகுப்பு மாமன்ற கூட்டம் நடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான்  வழங்கப்படுகிறது.

கூட்ட பொருள்  அடங்கிய திட்டங்களை அவசர கதி யில் படித்து கேள்வி கேட்கலாம் என்ற போதும் அதற்கான நேரம் மாமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை. இதனால் மக்கள் கோரிக்கைகளை பேசவோ. பகுதியில் உள்ள அடிப்படை கோரிக்கைகள் பற்றி பேசவோ  முடிவதில்லை. மாமன்ற கூட்டம் மக்கள் கோரிக்கைகளை பேசு வதற்காக நடத்தப்பட வேண்டும். அது சம்பிரதாயத்திற்காக நடத்தும் கூட்டமாக மாறிவிடக்கூடாது/ மக்  கள் பிரச்சனைகள் மற்றும் மதுரை யின் வளர்ச்சி குறித்து பேசுவதற்குத்  தான் மாமன்றம் கூடுகிறது, அதில் மக்களின் அடிப்படை பிரச்சனை களையே மாமன்ற உறுப்பினர்கள் பேச முடியவில்லை. பல அஜண் டாக்கள் விவாதங்கள் இன்றியே நிறைவேற்றப்படுகிறது.இது மாமன்ற உறுப்பினர்களின் ஜன நாயக குரலை நெரிக்கும் போக்காக உள்ளது.  தொடர்ந்து மாமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கை ஒதுக்கப்படுவதில்லை. கடந்த காலங்களில் இருக்கும் நடை முறை என்பதை தற்போதுள்ள மாந கராட்சி நிர்வாகம் கடைபிடிப்ப தில்லை. மாமன்ற கூட்டம் நடப்பது  சில மணி நேரம்தான் அதிலும் இருக்கை ஒதுக்கீடு குறித்த சர்ச்சை யினால் நேரங்கள் வீணடிக்கப்படு கின்றது. எனவே ஒவ்வொரு கட்சிக்  கும் உள்ள உறுப்பினர்களுக்கு தகுந்த அடிப்படையில் இடத்தினை  மாநகராட்சி மேயர் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.