districts

img

சமையல் சிலிண்டர் விலையை குறைக்கக் கோரி சிபிஎம் நூதன இயக்கம்

மதுரை, டிச.3-  சமையல் சிலிண்டர் விலையை அதிகளவில் உயர்த்தி மக்களை வதைக்கும் ஒன்றிய பாஜக அர சைக் கண்டித்தும் விலை உயர்வை  கட்டுப்படுத்தக் கோரியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை  மாநகர் மத்திய 1 ஆம் பகுதிக்குழு  சார்பில் கோரி எரிவாயு உருளை களுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் இயக்கம் நடைபெற்றது.  மதுரை மாநகராட்சி நிர்வாகம் 56 முதல் 61 ஆவது வார்டு பகுதி களில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்திட  வேண்டும்.  கொசுத் தொல்லையிலி ருந்து வைத்தியநாதபுரம், கங்கா  நகர் மக்களை காத்திட வேண்டும்.  குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை  தடுத்திட வேண்டும்.  மாநகராட்சி யில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று  வலியு றுத்தி வெள்ளியன்று வைத்தியநாத புரம் மாதா கோவில் அருகில் நடை பெற்ற இயக்கத்திற்கு சிங்காரபுரம் கிளைச் செயலாளர்  பரமசிவம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்  இரா. விஜயராஜன், மாநகர துணை மேயர் டி.நாகராஜன், பகுதிக்குழு செயலாளர் வை. ஸ்டாலின் ஆகி யோர் உரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ. பாண்டி, மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னி யம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கரிமேடு ரயில்வே காலனி வாசலை திறந்து பொதுமக்களின்  பயன்பாட்டிற்கு வழிசெய்திட வேண்டும். அத்தியாவசிய உண வுப்பொருட்கள் அரிசி, கோதுமை,  பருப்பு, எண்ணெய் மீதான ஜிஎஸ்டி வரியை கைவிட வேண்டும். சமை யல் கேஸ் விலை உயர்வை கட்டுப்  படுத்த வேண்டும். பால்விலை, வீட்டுவரி, மின் கட்டண உயர்வை குறைத்திட நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று வலியுறுத்தி கார்க்கி படிப்பகம் கிளைகள் சார்  பில் சனிக்கிழமையன்று ஏ.ஏ.ரோட்  டில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்திற்கு கிளைச் செயலாளர்  கே. எம். பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார், பகுதிக்குழு உறுப்பினர் உக்கிரபாண்டி முன் னிலை வகித்தார்,  மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜெ.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.  பாண்டி, மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள், பகுதிக்குழு செயலாளர் வை.ஸ்டாலின் ஆகி யோர் பேசினர்.