மதுரை,பிப்.19- மதுரை புறநகர் மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் கே.நாட்டாபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை துவக்க கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் சி.மணிகண்டன் தலைமை வகித்தார். ஊர் பெரியவர் வி.சிதம்பரம் செங்கொடியினை ஏற்றி வைத்தார். செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் வி.பி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப்பாண்டி, ஒன்றி யக்குழு உறுப்பினர் ரவி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.