districts

img

மேலக்குயில்குடியில் சிபிஎம் புதிய கிளை துவக்க விழா

மதுரை ஜூன் 28-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மேலக்குயில் குடியில் கட்சியின் புதிய கிளை துவக்க விழா மற்றும்  செங்கொடியேற்றும் நிகழ்ச்சி கிளைச் செயலாளர் எம்.ராஜா தலைமையில் திங்களன்று டைபெற்றது. பி.காந்தி முன்னிலை வகித்தார்.  மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம் செங்கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர்  மாவட்ட செயலாளர் மா.கணேசன், தாலுகாச் செயலாளர் எம்.ஜெயகுமார் ஆகியோர் பேசினர்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவி, மாவட்டக் குழு உறுப்பினர் வி.முத்துராஜூ, தாலுகாக்  குழு உறுப்பினர்கள் பி.தமிழரசன், எம்.தேவந்திரன், கிளை உறுப்பினர்கள் மற்றும் கிராமத்து பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.