மதுரை, மே 15- ஹரியானா மாநிலம் சோனிபட் நக ரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மதுரை ஆனை யூர் மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் வெற்றிவேல் பங்கு பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். இவர் பனங்காடி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான சக்திவேலின் மகன் ஆவார். வெற்றிவேலை கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பின ரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான பி.ஜீவானந்தம் பரிசு பொருள் வழங்கி பாராட்டினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பால கிருஷ்ணன், பனங்காடி கிளை செய லாளர் பழனி, ஆலங்குளம் கிளை செய லாளர் கணேசன் ஆகியோர் உடனி ருந்தனர்.