திருப்பூர், மார்ச் 28- தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத ஒன்றியமோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் திருப்பூர் வேலம் பாளையத்தில்பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். 15.வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் தண்ணீர்பந்தலில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில், நகரக் குழு உறுப்பினர் அ. உமாநாத் தலைமை ஏற்றார். இதில், நக ரச் செயலாளர் ச.நந்தகோபால் கண்டன உரையாற்றினார். நகரக் குழு உறுப்பி னர்கள் அ.ஆறுமுகம், பி.சின்னச்சாமி, கிளைச் செயலாளர் செல்வகுமார், வாலிபர் சங்க நகரச் செயலாளர் எஸ். வசந்த், மாணவர் சங்க தாலூகா செயலா ளர் கதிரவன், சிஐடியு பாத்திரத் தொழி லாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.