districts

சாத்தூர் அருகே பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர் கைது

சாத்தூர், ஜூலை 26- பள்ளி மாணவ,மாணவிகளிடம் இரட்டை அர்த்தம் தரும் வார்த்தை களில் தொடர்ந்து பேசி வந்த அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரை கைது செய்யக்கோரி கிராம பொதுமக்கள் மாணவ,மாணவிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது புதுச்சூரங்குடி கிரா மம். இங்கு அரசு உயர்நிலைபள்ளி உள்ளது. இதில், புதுசூரங்குடி, நடுச்  சூரங்குடி, பந்துவார்பட்டி, ஸ்ரீரெங்கா புரம், அச்சங்குளம் உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரு பவர் வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன். இவர் தன்னிடம் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் சாதிரீதியாக திட்டி யுள்ளார். மேலும், ஆபாச வார்த்தை களாலும், இரட்டை அர்த்தம் தரும் வகை யிலும் பேசி வந்துள்ளார். மேலும், சில  அசிங்கமான வார்த்தைகளை கூறி இதற்கு உங்கள் வீட்டில் உள்ள பெற் றோரிடம் அர்த்தம் கேட்டு வாருங்கள் எனவும் கூறியுள்ளார்.

இதனால், பள்ளி மாணவ, மாணவி கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்த தோடு, நடந்தவற்றை தங்களது பெற் றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால், ஆவேசமடைந்த மாண வர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்  தாமோதரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவ லறிந்து விரைந்து வந்த சாத்தூர்  காவல்துறை துணை கண்காணிப்பா ளர் நாகராஜன், கல்வித்துறை அதி காரிகள் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  முடிவில், கணித ஆசிரியர் தாமோ தரன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,  தாமதோரனை பணியிடை நீக்கம்  செய்து உத்தரவிட்டார். இதனைத் தொட ர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்  எஸ்.சரோஜா, மூத்த தலைவர் கே. சுப்பாராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் மனோஜ்குமார், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, மாவட்ட செயலாளர் ஜோதீஸ்வரன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கருப்ப  சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.