districts

img

தோழர் தமயந்தி உடலுக்கு சிபிஎம், மாதர் சங்கத்தினர் அஞ்சலி

திண்டுக்கல், ஏப்.7- சாணார்பட்டி அருகே பேருந்தில் படு கொலை செய்யப்பட்ட தோழர் தமயந்தி யின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  தோழர் தமயந்தி கோபால்பட்டி அருகே யுள்ள கணவாய்பட்டியைச் சேர்ந்தவர். தமயந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தார். மாதர் சங்கத்தின்  மாவட்ட பொருளாளராக செயல்பட்டுள்ளார். சக்தி கலைக்குழுவிலும் பணியாற்றி உள்ளார். இவரது கணவர் கோபி  திண்டுக் கல்லில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோபிக்கும் அவரது அண்ணன் ராஜாங்கம் மற்றும் அக்கா ஆகியோருக்கு பூர்வீக நிலமாக  ஒரு ஏக்கர் 18  சென்ட் நிலம், இன்னொரு  தாவாவில் இருந்து வந்தது. இந்நிலையில் மொத்த நிலத்தையும் கோபியின் அண்ணன், மற்றும் அக்கா காளி யம்மாள் என்ற ஈஸ்வரி ஆகியோர் அப கரித்துக்கொண்டு, கோபிக்கு பங்கு கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக   கோபி தனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்று  திண்டுக்கல் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வியாழ னன்று இவ்வழக்கின் தீர்ப்பு வர இருந்த நிலையில் கோபியின் மனைவியான தோழர் தமயந்தி வழக்கின் விவரம் தெரிந்து கொள்வதற்காக கணவாய்பட்டி அருகே யுள்ள மேட்டுப்பட்டியிலிருந்து தனியார் பேருந்தில் ஏறி வந்துள்ளார். அப்போது அவரை கோபியின் அண்ணன் ராஜாங்க மும், அவரது 11 வயது மகனும் பின் தொடந்துள்ளனர். பேருந்தில் 5 பேர் மட்டுமே இருந்த நிலையை தனக்கு சாதக மாக பயன்படுத்திக்கொண்டு ராஜாங்கம் தமயந்தியின் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் கோபால்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இச்சம்பவத்தையடுத்து மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். 3 தனிப்படை அமைத்து கொலையாளி ராஜாங்கத்தை தேடி வந்தனர். 

அஞ்சலி

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமயந்தியின் உடல்  உடற்கூராய்வு முடிந்த பிறகு மேட்டுப்பட்டி யில் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் சிபிஎம் தலைவர்கள் கே.பாலபாரதி, ஆர்.சச்சிதானந்தம், மாதர் சங்கத் தலைவர்கள் ஜி.ராணி, பாப்பாத்தி, வனஜா, பாண்டியம்மாள், ஏ.சுமதி, வி.சுமதி, தங்க மணி, எஸ்.எம்.பழனியம்மாள் ஆகியோர் தமயந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் கே.பாலபாரதி, ஆர்.சச்சிதானந்தம், ராணி ஆகியோர் சாணார்பட்டி காவல்நிலை யம் சென்று விரைவில் கொலையாளியை கைது செய்ய வேண்டும் என்று காவல் ஆய்வாளரிடம் வலியுறுத்தினர்.  கொலையாளி கைது  இதனையடுத்து  கொலையாளி ராஜாங்கத்தை பழனி புறவழிச்சாலையில் கைது செய்த போலீசார் சாணார்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இன்று மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்  கோபால்பட்டி சாணார்பட்டி பகுதி யில் தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறை களை கண்டித்தும், தமயந்தியின் மர ணத்திற்கு நியாயம் கோரியும், கொலை யாளி பிணையில் வர முடியாதபடி வழக்கு கள் பதியப்பட வேண்டும் என்று வலி யுறுத்தியும் கோபால்பட்டியில் சனிக்கிழமை யன்று மாலை 4 மணிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது. (நநி)