தென்காசி,டிச. 3- கட்டுமான தொழிலாளர்க ளின் கோரிக்கைகளை வலி யுறுத்தி மறியல் போராட்டம் கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் சீ. மாதவன் தலைமையில் தென் காசியில் நடைபெற்றது. மறியல் போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு தென்காசி மாவட்டச் செயலாளர் எம். வேல்முருகன் பேசினார். இந்தப் போராட்டத்தில் முன்னிலையாக கட்டுமான சங்க மாவட்ட நிர்வாகிகள் ஏ.கசமுத்து, எஸ்.முருகையா, டி.பொன்செல்வம், எம்.அழகையா, முத்துலட்சுமி மற்றும் கட்டுமான சங்க ஸ்தாபக தலைவர் அச்சன்புதூர் முருகையா, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே . தர்மராஜ், எஸ்.கற்பகவல்லி, சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் பேச்சிமுத்து, ரயில்வே முத்துச்சாமி,வி.கே.புதூர் ராதாகிருஷ்ணன், குருசாமி, செங்கோட்டை முருகன், சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி மூர்த்தி உட்பட 80 பேர் கலந்து கொண்டனர். கட்டுமான தொழிலாளர்களு க்கு மாத பென்ஷன் ரூபாய் 3000/-வழங்கிட வேண்டும், ஏற்கனவே புதிய நல வாரிய உறுப்பினராக பதிவு செய்த அனைவருக்கும் நலவாரிய உறுப்பினர் கார்டு உடனடியாக வழங்கப்பட வேண்டும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திட மத்திய மோடி அரசு கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசே சட்டமன்றத்தில் அறி வித்தபடி தென்காசி மாவட்டத் தில் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை உடனடியாக அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது
தூததுக்குடி
தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் மறியலில் ஈடுபட்ட சிதம்பரனார் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 130 பேர் கைது செய்யப்பட்டனர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் காசி முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ரசல், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கணேசன், சிவபெருமாள், ஸ்டான்லி, முருகன், கிருஷ்ண பாண்டி, பெயிண்டிங் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் தேவேந்தி ரன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகி கள் ராஜேஷ், பெருமாள், செல்வகுமார், முத்து கிருஷ்ணன், அந்தோணி செல்வம், ஆறுமுகம், கோபால், முத்துச்சாமி, கண்ணன், பார்வதி, சிவசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.