districts

img

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

தேனி, மார்ச் 26- ராகுல்காந்தியின் எம்பி பதவியை பறித்த ஒன்றிய  பாஜக அரசைக் கண்டித்து  தேனி காமராசர் பேருந்து  நிலையம் அருகே காங்கிரஸ்  சார்பில் சத்தியாகிரக அறப் போராட்டம் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் முரு கேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணி, துணைத் தலை வர் சன்னாசி, மகிளா காங்கி ரஸ் தலைவி கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்  தனர். தேனி, சின்னமனூர் வட்  டாரத் தலைவர்கள் முருகன்,  ஜீவா, தேனி நகரத் தலைவர் கோபிநாத், மாநில பொதுக்  குழு உறுப்பினர் முனி யாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விருதுநகர்   விருதுநகர் கருமாதி மடம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்திற்கு நக ரத்தலைவர் டி.ஜி.நாகேந்தி ரன் தலைமை தாங்கினார்.  முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் பாலகிருஷ்ண சாமி, நகர்மன்ற உறுப்பி னர்கள் உட்பட பலர் பங் கேற்றனர். இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்ட  காங்கிரஸ் கமிட்டி சார்பில்  அரண்மனை முன்பாக  நடைபெற்ற போராட்டத் திற்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் மலேசிய பாண்டியன் தலைமை வகித்தார் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரைக் கண்ணன், மகிளா  காங்கி ரஸ் தலைவர்கள் என் ராம லட்சுமி பெமிலா விஜய குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.