districts

img

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

தேனி, செப்.1- தேனி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு  கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் ஆர்.மோனிகா, பி.நந்தினி, கே.ஷியாமளா ஆகியோர் முதல் 3 இடங்க ளைப் பெற்று தலா ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பெற்றனர். மாணவி எம்.ஹரிஷ்மா 7-ம் இடம் பெற்று ரூ.ஆயிரம் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் டி.ராஜ மோகன், துணைத் தலைவர் பி.பி.கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு, இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், முதல்வர் எஸ்.சித்ரா ஆகியோர் பாராட்டினர்.