மதுரை, ஜூன் 7- சமூக பாதுகாப்பு திட்டத் தில் உதவியாளராக வேலை செய்யும் ராமையா என்பவர் உதவித்தொகைக்காக மனு கொடுக்கும் மக்களிடம் லஞ் சம் வாங்குவதை கண்டித் தும் அதனை தட்டிக்கேட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மேலூர் தாலுகாச் செயலா ளர் ஏ.தனசேகரனை சாதிய வன்மத்தோடு பேசி தாக்க வந்ததை கண்டித்தும் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி அகில இந்திய விவ சாயத்தொழிலாளர் சங்கத் தின் மேலூர் தாலுகாக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மேலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா தலை வர் பி.குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் வி.உமாமகேஸ்வ ரன், ஒன்றியச் செயலாளர் ஏ. தனசேகரன், விவசாயி கள் சங்க மாவட்டப் பொரு ளாளர் வீ.அடக்கிவீரணன், தாலுகாச் செயலாளர் ஏ. இராஜேஸ்வரன், சிஐடியு தாலுகா தலைவர் எஸ்.பி. மணவாளன், தாலுகாச் செய லாளர் சேகர், கரும்பு விவ சாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் கரு.கதிரேசன் பி.எஸ். ராஜாமணி, ஆகியோர் பேசி னர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகாச் செயலாளர் எம். கண்ணன் ஆதரித்துப் பேசி னார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா நிறைவுரையாற்றினார். சங் கத்தின் தாலுகா பொருளா ளர் கே.கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.