districts

img

சிபிஎம் இடுக்கி மாவட்ட மாநாட்டிற்கு கம்பத்திலிருந்து தோழர் அப்துல் வஹாப் நினைவு ஜோதி

தேனி, ஜன.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்ட மாநாடு குமுளியில் நடைபெறு வதை முன்னிட்டு கம்பத்திலி ருந்து கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் அப்துல் வஹாப் நினைவாக ஜோதி பய ணம் கம்பத்தில் துவங்கியது. கட்சியின் இடுக்கி மாவட்ட மாநாடு குமுளியில் ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் நடை பெறுகிறது. மாநாட்டினை முன் னிட்டு குமுளி சிவப்பு மயமாகி யுள்ளது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், தீக்கதிர் பொது மேலாளர், இடுக்கி மாவட்ட பொறுப்பு செயலாளர் போன்ற  பதவிகள் வகித்த, சுதந்திர போரா ட்ட வீரர் தோழர் அப்துல் வஹாப் நினைவாக கம்பத்திலிருந்து ஜோதி புறப்பட்டது. அப்துல் வஹாப் பேரன் அபு ஜோதியை எடுத்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.வெங்கடேசனி டம் வழங்கினார். டி.வெங்கடேசன் அப்துல் வஹாப் நினைவு ஜோதியை இடுக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.வி.வர்கீஸ், மாவட்டக்குழு உறுப்பினர் சோத னன் ஆகியோரிடம் வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சி யில் மூத்த தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு, கம்பம் ஏரியா செய லாளர் லெனின், கூடலூர் ஏரியா செயலாளர் பி.ஜெயராஜ் உள் ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கம்பம் கட்சி அலு வலகம், கூடலூர் ஆகிய இடங்க ளில் ஜோதி பயணத்திற்கு வர வேற்பு அளிக்கப்பட்டது.