புதுச்சேரி,பிப்.2- ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி பிரதேச மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிற மாநிலத்தவர்கள் சேரு வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப் பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களில் புதுச்சேரி குடி யுரிமை பெற்றவர்களுக்கு 64 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலை யில், பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் புதுச்சேரி குடியுரிமையை பயன்படுத்தி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றிருப்பதாக பெற்றோர் சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ள பெற்றோர் சங்கத்தினர், புதுச்சேரியில் பிறந்து ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மட்டுமே குடியுரிமை பட்டியலில் தகுதியுடையவர்களாக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.