districts

img

கருங்கலில் என்.நன்மாறன் நினைவேந்தல்

நாகர்கோவில், நவ.28- தமுஎகச நிர்வாகியும் முன் னாள் சட்டமன்ற உறுப்பினரு மான என்.நன்மாறன் நினை வேந்தல் நிகழ்ச்சி கருங்கலில் தமுஎகச கன்னியாகுமரி மாவட் டக்குழு சார்பில் சனியன்று (நவ.27) நடைபெற்றது. கருங்கல் ஹோலிஏஞ்சல்ஸ் அகாதமி அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் மகேஷ் தலைமை வகித்தார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, கிள்ளியூர் வட்டார செயலாளர் சாந்த குமார், மாவட்ட செயற்குழு உறுப் பினர் கவிஞர்.மிகையிலான், றோஸ்ராபின், எழுத்தாளர் குமரி எழிலன், ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.   நிகழ்வில் தமுஎகச மாவட்ட தலைவர் ஜெயகாந்தன், செய லாளர் ஹசன், பொருளாளர் அருள்மனோ, கவிஞர்கள் தக்கலை ஹலீமா, அரங்கசாமி, சுஜா ஜாஸ்பின், மாற்று திறனாளி கள் சங்கத்தின் மாவட்ட தலை வர் சார்லஸ், சிஐடியு மாவட்ட செயலாளர் தங்க மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;