districts

img

கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சின்னாளப்பட்டி, ஏப்.9-  திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள லட்சுமி கல்வியியல் கல்லூரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.  நிகழ்விற்கு பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பங்கஜம் தலைமை தாங் கினார். கல்லூரியில் ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்து தமிழக அரசில் இணை செயலாளராக இருந்த பழனியாண்டி ஐஏஎஸ் பேசினார்.  நிகழ்ச்சியில் முன்னாள் கல்வி இயக்குநர் சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் மலர் விழி, காந்தி கிராம அறக்கட்டளை நிர் வாகி சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.