சின்னாளப்பட்டி, ஜூன் 6- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் என். பஞ்சம்பட்டி, அம்பாத்துறை, சீவல் சரகு,ஆத்தூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ. 4.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி செவ்வாயன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவு மறு சுழற்சி மையம் ,திடக்கழிவு மேலாண்மை மையம் , ரூபாய் 12.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நியாய விலைக்கடை கட்டுமான பணிகளையும் அம்பாத்துறை ஊராட்சியில் குரும்பம்பட்டி பள்ளியில் ரூ.31 . 64 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகள், சீவல் சரகு ஊராட்சியில்ஆதிலட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் ரூ,7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையலறை, ஆத்தூர் ஊராட்சியில் ரூ.3 45 கோடி மதிப்பீடு கட்டப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகள் என பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலை வர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஆணையாளர் லாரன்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி, பஞ்சம்பட்டி ஊராட்சித் தலைவர் பாப்பாத்தி நாகராஜ், செயலர் சேசுராஜ், சீவல் சரகு ஊராட்சி தலைவர் ராணி ராஜேந்திரன், செயலர் நட ராஜன், அம்பாத்துறை ஊராட்சி தலைவர் சேகர், செய லர் செந்தில், ஆத்தூர் ஊராட்சி தலைவர் ஜம்ரூத் பேகம், செயலர் கண்ணன் உட்பட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.