districts

img

அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டையில் ஆட்சியர் ஆய்வு

சின்னாளப்பட்டி,ஜூன். 9 திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 61.05-இலட்சத்தில் தூர்வாரி சுற்றுச் சுவர் கட்டப்பட்ட இராஜதானிக்கோட்டை அரண்மனை குளம் மற்றும் கொழிஞ்சிப்பட்டியிலுள்ள வளமீட்பு பூங்காவில் செய்யப் பட்டு வரும் நவீன முறையிலான குப்பைக்கழிவு மேலாண்மை பணிகள், அதன் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரம்  மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு முறைகளை ஆட்சியர் பூங்கொடி பார்வையிட்டார்,  நிலக்கோட்டை பேரூராட்சி பொது மயானத்தில் ரூ. 1.55 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன மின் எரியூட்டு மையம் மற்றும் இலட்சுமிபுரத்திலுள்ள வளமீட்பு பூங்காவை பார்வையிட்டு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் செயல்முறை விளக்கத்தினை கேட்டறிந்தார்,இந்த ஆய்வின்போது அம்மைய நாயக்கனூர் பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடிமுருகு,சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் அசோக்குமார் ,நிலக்கோட்டை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் சடகோபி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.