districts

img

தூய்மைப் பணி விழிப்புணர்வு முகாம்

மதுரை, அக்.9- மதுரை கோட்டம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மேலவாசல் பகுதியில் தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  முகாமில், மதுரை மாநகராட்சி சுகாதார அதிகாரி வீரன், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், தூய்மை பணியாளர்கள் மற்றும் திடீர் நகர் காவல்துறையினர் கலந்து கொண்டனர். சமூக அலுவலர் பூமிகா, சமுதாய பங்கேற்பு உதவியாளர்கள் முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.  நிகழ்வில், மேலவாசல் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், இளையோர் மன்ற நிர்வாகிகள், மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு டெங்கு மற்றும் சுகாதாரம் குறித்த பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக பராமரித்துக் கொள்வதாக உறுதியெடுத்து கொண்டனர்.