districts

img

சக்கரம் சூழல களிமண் பானையாகிறது நகராதது எங்கள் வாழ்வு மட்டுமே

களி மண் தட்டுப்பாட்டால், மண்பாண்ட உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டள்ளது. குறிப்பாக கார்த்திகை தீப திருவிழா நெருங்கி வருகிற நிலையில், விளக்குகள் தயா ரிக்கும் தொழில் முடங்கி வாழ்வா தாரம் பாதிக்கும் அபாயம் உள்ள தாக தொழிலாளர்கள் அச்சம் தெரி விக்கின்றனர்.  தீபங்களின் திருவிழாவான திருக் கார்த்திகை நாளில் ஒவ்வொரு வீட் டிலும் அகல் விளக்கு ஏற்றப்பட்டு மேதமின்றி அனைவரும் கொண்டா டுவது வழக்கம். அதற்காக தமி ழகம் முழுவது அகல் விளக்கு தயா ரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி, எருமைப்பட்டி, சித்தூர்,  மேல் சித்தூர் உள்ளிட்ட 20க்கும்  மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் மற்றும் மண்பாண்டங்கள் கர்நாடக,  கேரளா, ஆந்திரா, திருவண்ணா மலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட  பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் 6ஆம்  தேதி கார்த்திகை தீபம் கொண்டா டப்பட்டுள்ள நிலையில், அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. இந்த  ஆண்டு புதிய ரகமான விளக்குகளை யும் மண்பாண்ட தொழிலாளர்கள்  தயாரித்து வருகின்றனர். இந் நிலையில், மண்பாண்டங்கள் தயா ரிக்க தேவையான மூலப்பொருளான களி மண் கிடைப்பதில் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது, இத்தொழிலாளர் களை கவலை கொள்ள செய் துள்ளது. 

இதுகுறித்து மண்பாண்ட தொழி லாளர்களான நீலா மற்றும் சகா தேவன் கூறுகையில், நாங்கள் இருபது வருடங்களுக்கு மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வரு கிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளக்கு தயாரிப்பு அதிக அளவில் உள்ளது. கடந்தாண்டு ஐம் பதாயிரம் விளக்குகள் தயாரிப்பது பெரிய சுமையாக இருந்த நிலையில்,  தற்போது இரண்டு லட்சம் விளக்கு கள் வரை தயாரித்து வருகிறோம். பல ஊர்களில் இருந்து எங்களுக்கு ஆர்டர்கள் வந்துள்ளது. ஆனால் களி மண் கிடைப்பதில் அதிக அளவில் சிரமம் உள்ளது. இதனால் விளக்கு  தயாரிக்கும் பணி மிகவும் கடினமாக  உள்ளது. அரசு இதனை கருத்தில்  கொண்டு மண்பாண்ட தொழிலாளர் களுக்கு எளிமையாக களிமண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அகல் விளக்கு தாயரிக்கிற தொழி லாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என் கிற எதிர்பார்ப்போடு சக்கரத்தை சுழற் றுகிறார்கள் மண்பாண்ட தொழிலா ளர்கள்.  -எழில்,சேலம்