districts

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மதுரையில் சாதித்த அரசுப்பள்ளிகள்

 மதுரை, ஜூன் 20- தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்க ளன்று வெளியிடப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:- மதுரை மாவட்டத்தில் 38,559 பேர் தேர்வெழுதினர். 36,665 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்ச்சி சதவீதம் 95.09.  தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள்- 18,086. மாணவிகள் -18,579. அதிக தேர்ச்சி மாணவிகள்.
சாதித்த அரசுப்பள்ளிகள்
மதுரை: மொத்த அரசுப் பள்ளிகள்-151. தேர்வெழுதி யோர் - 9,028. தேர்ச்சி பெற்றவர்கள் - 8,368. தேர்ச்சி சதவீதம்-92.69. மாற்றுத் திறனாளிகள் அபாரம் (தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் அடைப்புக்குறிக்குள்) மதுரை மாவட்டத்தில் கண்பார்வையற்றவர்கள் 49, (49)  காது கேட்காதோர்-வாய்பேச முடியாதோர் - 43 (42). இதர  மாற்றுத்திறனாளிகள்-25 (23). இதர பிரிவினர்-107 (100) பேர்  தேர்வெழுதினர்.