districts

img

சிவகாசியில் சிஐடியு நடைபயண பொதுக்கூட்டம்

சிவகாசி, மே 23- தமிழக உழைப்பாளி மக்களின் நலன்களை பாதுகாத்திட சிஐடியு சார்பில் 7 முனைகளிலிருந்து நடைபய ணம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் விலைவாசி உயர் வால் ஏழை, எளிய மக்கள் பெரும் துய ரத்தை சந்தித்து வருகின்றனர். எனவே,  விலைவசாசி உயர்வை கட்டுப்படுத்த  வேண்டும். படித்து முடித்து வேலை யில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். சிறு, குறு தொழில்களை பாதுகாத்திட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்கனவே உள்ள பணியிடங்களில் அவுட்சோர்சிங் முறை யை புகுத்தக் கூடாது என வலியுறுத்தி சிஐடியு சார்பில் நடைபயணம் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட் டம், சிவகாசியில் நடைபயண பொதுக் கூட்டம் மாவட்ட துணைச் செயலாளர் கே.முருகன் தலைமையில் நடை பெற்றது. நகர கன்வீனர் இ.பழனி வர வேற்றார். மாவட்டத் தலைவர் எம்.மகா லெட்சுமி, மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா ஆகியோர் விளக்கிப் பேசினர். மாநில துணைத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். மோகன்ராஜ் நன்றி கூறினார். மேலும் இதில், மாவட்ட பொருளாளர் வி.ஆர்.செல்லச்சாமி, ஜெபஜோதி, அம்பேத்குமரேசன், மகேந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.