districts

வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து சிஐடியு சங்கத்தினர் ஹோலி கொண்டாட்டம்

திருப்பூர், மார்ச் 8- வட மாநிலத் தொழிலாளர்கள் மீது  கொலைவெறித் தாக்குதல் நடத்துவ தாக சமூக ஊடகங்களில் வெறுப்புப் பிரச்சாரம் பரப்பப்பட்டுள்ள நிலையில்,  திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்க ளுடன் நல்லிணக்கம், நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக சிஐடியு சங்கத் தினர் ஹோலி பண்டிகை கொண்டா டினர். திருப்பூரில் பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியன் நிறுவனங்கள் மற்றும் பல தொழில் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.சிஐடியு பனியன்  சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் புத னன்று வட மாநில தொழிலாளர்களுடன்  இணைந்து ஒருவருக்கு ஒருவர் வண்ணப் பொடிகளை பூசிக் கொண் டும், இனிப்புகளைப் பரிமாறியும் ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன்  கொண்டாடினர். செட்டிபாளையம், பூலுவபட்டி, பாண்டியன் நகர் உள்ளிட்ட  பகுதிகளில் இந்த கொண்டாட்டம் நடை பெற்றது. இந்நிகழ்வில், சிஐடியு பனியன் சங்க  மாவட்ட தலைவர் சி.மூர்த்தி, பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலா ளர் ஜி.சம்பத், பொருளாளர் கே.நாக ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளி யப்பன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பாலன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.அருள், வடக்கு ஒன்றிய தலைவர் ரேவந்த், பனியன் சங்க நிர்வாகிகள் சனோஜ், ராஜேஸ், பரதன், பாலாஜி உட்பட திரளானோர் பங்கேற்றனர். வட மாநிலத் தொழிலாளர்கள் மீது  தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்துவதாக வெறுப்புப் பிரச்சாரத்தை சுயநல நோக் கத்துடன் சிலர் தங்கள் சொந்த மாநிலங் களில் பரப்பி வரும் நிலையில் இங் குள்ள தமிழகத் தொழிலாளர்களுடன் இணைந்து இந்த பண்டிகையைக் கொண்டாடி இருப்பது மிகவும் மகிழ்ச்சி  அளிப்பதாகவும், நம்பிக்கை அதிகரிப்ப தாகவும் அந்த தொழிலாளர்கள் தெரி வித்தனர்.