districts

img

துப்புரவுப் பணிகள் தனியார்மயத்தைக் கண்டித்து விருதுநகரில் சிஐடியு போராட்டம்

விருதுநகர், ஜூன் 21- விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணிகள் தனியா ருக்கு டெண்டர் விடப்பட்டுள்  ளது. இதனைக் கண்டித்தும், ஒப்பந்த பணியில் ஈடுபட் டுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்  கிட வலியுறுத்தியும் சிஐடியு- ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்  பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.விஜயபாண்டி தலைமையேற்றார். துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகர் செய லாளர் எல்.முருகன் பேசி னார். முடிவில் சிஐடியு மாவட்ட இணைச் செயலா ளர் ஆர்.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். மேலும் இதில், பாண்டி, பழனி, பாலமுருகன் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.