சேலம், அக்.14- தமிழ்நாடு அரசு நலவா ரியத்தின் மூலம் செயலி அமைத்து, ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் ்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழி லாளர் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளனர். ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் மேலும் உயர்த்துதால் ஆட்டோ தொழில் நெருக்கடியில் உள்ளது. ஆட்டோ தொழிலாளர்களை பாதுகாக்க கேரள மாநில இடது முன்னணி அரசு ஓலா, உபர் போன்று செயலி அமைத்துள்ளதை போல தமிழ் நாடு அரசு நல வாரியத்தின் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை தன்னிச்சையாக திருத்தியதால், 15 ஆண்டு கால ஆட்டோக்கள் காலாவதியாகும் என அறிவிக்கப்பட்டதாலும் ஆட்டோ தொழில் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.
எனவே, தமிழக முதல்வர் தலையீடு செய்து வங்கியின் மூலம் கடன் பெற்று புதிய ஆட்டோக்களை பெற்று தந்தால் தவணை முறையில் கடனை செலுத்தி ஆட்டோ தொழி லாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும். சட்டத்திற்கு புறம்பாக ராபிட்டோ என்ற இருசக்கர டாக்ஸி இயக்கப்படுவதை தடை செய்ய வேண்டும். காவல்துறை ஒரு தலைப் பட்சமாக ஆன்லைன் மூலம் வழக்குப் பதிவு செய்து அபராதம் போடும் நடை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஸ்டாண்ட் இல்லாத ஆட்டோக்கள் நிறுத்த மாவட்ட நிர்வாகம் ஸ்டாண்ட் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். இன்சூரன்ஸ், எப்சி கட்டணங்களை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே. தியாகராஜன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதயகுமார், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் உதய குமார், மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாவட்ட நிர்வாகி மோகன் குமார் திரளான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.