சின்னாளபட்டி, பிப்.7- தென்னிந்திய அளவில் ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டிகள் பிப்ர வரி 8, 9 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறவுள் ளது. இந்த போட்டியில் தமிழ் நாடு, புதுச்சேரி, கேரளா, தெலுங் கானா, கர்நாடகா மற்றும் ஆந் திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு அணி சார்பாக 12 ஆண் கள், 12 பெண்கள் கலந்து கொள் கின்றனர். இதில், திண்டுக்கல் மாவட்டத் தில் இருந்து சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டரங்கில் பயிற்சி பெற்ற சஹானா, தீபிகா, அனுஸ்ரீ என்ற மாணவிகள், சுதர்சன் என்ற மாணவர் ஆகி யோர் கலந்து கொள்கின்றனர். புதுச்சேரியில் நடைபெற வுள்ள போட்டியில், தமிழ்நாடு அணி சார்பாக பயிற்சியாளர் பிரேம்நாத் தலைமையில் அகில இந்திய போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளை கண்மணி, மதுநிதா, சக்திவேல், புனிதா மற்றும் நாகராஜ் ஆகி யோருடன் இணைந்து புதுச் சேரிக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இதில் பயிற்சி பெற்ற மாண வர்கள், பெற்றோர் அனைவரும் வழியனுப்பி வைத்தனர்.