districts

img

பிளஸ் 2 தேர்வில் சாதித்த சிபிஎம், தொழிற்சங்கத் தலைவர்களின் பிள்ளைகள்

விருதுநகர், மே 10- பிளஸ் 2 பொதுத் தேர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் புதல்வன், புதல்வியர் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜபாளையம் நகரச் செயலாளர் பி. மாரியப்பன். இவரது மகள் எம்.பால புஷ்பா 600க்கு 584 மதிப்பெண்கள் பெற்  றுள்ளார். இவர், இராஜபாளையம் அம்ம ணியம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 3வது  இடத்தைப் பெற்றுள்ளார். மேலும், இவர் வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் ஆகிய இரு பாடங்களில் 100க்கு 100 மதிப்  பெண்கள் பெற்றும் சாதனை படைத் துள்ளார். சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் விருதுநகர் மண்டல  பொதுச் செயலாளர் எம்.வெள்ளைத் துரை. இவரது மகன் சி.வி.சுர்ஜித் 600க்கு 542 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் 83, ஆங்கிலம் 94, இயற்பியல் 92, வேதி யல் 90, கணினி அறிவியல் 99, கணிதம் 84 என பெற்று சாதித்துள்ளார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் ( சாலை ஆய்வாளர்கள்) சங்க மாநில பொதுச் செய லாளர் சி. குருசாமியின்   2வது  மகள் தனுஸ்ரீ. இவர்  பிளஸ் 2 பொதுத் தேர்வில்  600க்கு 530 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதில், வேதியியல் பாடத்தில் 100க்கு 100   மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத் துள்ளார்.