சின்னாளப்பட்டி, மே 8- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள சேரன் வித்யாலயா தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 117 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தச் சாதனை 16 ஆண்டுகளாகத் தொடர்கிறது. மாணவி சோபனாதேவி கணிதம், இயற்பியல், வேதி யியல் ஆகிய படங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற் றுள்ளார். மொத்தம்-597 மதிப்பெண் பெற்று மாவட்ட அள வில் இரண்டாமிடம் ஒன்றிய அளவில் முதலிடம் பிடித் துள்ளார். சிந்துவர்தினி, பாலசந்திரன் ஆகியோர் 587 பெற்று இரண்டாமிடம், மோதிகாஸ்ரீ 585 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர். சாதனை மாணவர்களை பள்ளியின் நிர்வாக இயக்கு நர் சிவக்குமார், முதல்வர் திலகம் ஆகியோர் பாராட்டி பரிசு கள் வழங்கினர். இந்நிகழ்வின் போது உதவித் தலைமை ஆசிரியர் வெண்ணிலா, மேலாளர் பாரதிராஜா ஆகியோர் உடனிருந்தனர். பள்ளியில் தேர்வெழுதிய 117 பேரில் வேதியியல்-66, இயற்பியல்-25, கணித அறிவியல்-31, தாவரவியல்-11 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். 580-க்கு மேல் 17, 550-க்கு மேல் 84 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.