districts

மதுரை முக்கிய செய்திகள்

அரசு இராஜாஜி மருத்துவமனையில்  நவீன கருவி மூலம் கீமோதெரபி  

மதுரை, பிப். 3-   மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை புற்று நோய் அறுவை சிகிச்சை துறை பிரிவில் புதிய சிகிச்சை வசதிகள் சென்ற வாரம்  அறிமுகப்படுத்தப்பட்டன . புற்றுநோய் பாதித்தவர்களுக்கு கீமோதிரபி மருந்தை . கீமோ போர்ட் ( Chemoport ) என்று சொல்லக்கூடிய  உடலுக்குள்ளேயே பொருந்தக்கூடிய கருவிகள் ஐந்து நோயாளிகளுக்கு முதன்முறையாக அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டது .  இந்த கருவியை சுமார் மூன்று ஆண்டுகள் வரை உடலிலே வைத்துக் கொள்ளலாம் . கைகளில் peripheral veins என்று சொல்லக்கூடிய இரத்த நாளங்கள் மூலம் கேன்சர் மருந்து செலுத்தும் போது அது மிகுந்த வலியை கொடுக்கும் . புற்றுநோய் மருந்துகள் இரத்த நாளங்களில் இருந்து கசிந்து வெளியே வந்தால் எரிச்சல் முதல் திசு சிதைவு ஏன் சில சமயம் கைகளை இழக்கும் அபாயத்தை கூட ஏற்படுத்தும் . குறிப்பாக இரத்தப்புற்று நோய் சில எலும்பு புற்று நோய் , மார்பக புற்றுநோய் , சினைப்பை புற்றுநோய் நீண்ட நாள் சிகிக்சை மூலம் மேல் கூறிய இந்த நோய்களை நம்மால் குணப்படுத்த முடிகிறது அல்லது வாழ்நாளை நீட்டிக்க முடிகிறது .  தொடர்ந்து பழைய முறையில் கைகளில் மருந்து செலுத்துவது கடினமான காரியமாகும் . ஏனெனில் இரண்டு மூன்று மருந்துகளுக்கு பிறகு கைகளில் உள்ள இரத்த நாளங்கள் அடைத்துவிடும் .  இரத்த நாளங்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக பணியாக இருக்கும் . தேர்ந்த மருந்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமே இரத்த நாளங்களை கண்டுபிடிக்க முடியும் . இவ்வாறு சிரமத்துடன் இரத்த நாளங்களை தேடுவது ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் மிகுந்த வேதனையை கொடுக்கும் .  அரசு மருத்துவமனைக்கு வரும் அதிக நோயா ளிகளும் இதில் பல சிரமங்களை அடைகின்றனர் .  சில பல நாட்கள் காத்திருந்து உள் நோயாளியாக சேர்ந்து சிரமப்பட வேண்டி உள்ளது . இந்த கிமோ போர்ட் இந்த அனைத்து சிரமங்களை போக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். நோயாளிக்கு அவர்கள் வேத னையை குறைத்து, வந்தவுடன் மருந்து போட்டு விட்டு எந்த வலியும் இன்றி எளிதாக செல்லலாம் . புற்று நோய் மருத்துவர்களும் குறைந்த மனித சக்தியில் அதிக நோயாளிகளுக்கு எந்த பின்விளைவுகளும் இன்றி சிகிச்சை கொடுக்கலாம் . குறிப்பாக நோயாளிகள் காலையில் வந்து மருந்தை செலுத்தி கொண்டு புற நோயாளியாகவே வீடு சென்று விடலாம் .  எனவே இந்த கீமோ போர்ட் சிகிச்சை முறை அரசு இராஜாஜி மருத்துவமனையை நாடி வரும் ஏழை எளிய புற்றுநோய் நோயாளிகளுக்கு மிகப் பெரிய வாய்ப்பாகும். . இதில் பெரும் முயற்சி எடுத்த மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் டாக்டர் இரத்தின வேல், இந்த பயிலரங்கை நடத்த ஒத்துழைப்பு கொடுத்த மயக்கவியல் துறை , புற்று நோய் மருத்துவ துறை ஆகியோருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை சார்பாக துறைத்தலைவர் பேராசிரியர் மருத்துவர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.  தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துக் காப்பீட்டு திட்டத்தில் இந்த கீமோபோர்ட் வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது . எனவே இது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது . 

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

காரியாபட்டி, பிப்.3- காரியாபட்டி அருகே பூட்டிய வீட்டில் 6 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள  பணிக்கணேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய லட்சுமி(40). இவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு மாடு களுக்கு புல் அறுக்கச் சென்று விட்டாராம். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டுக் கதவு திறக்கப்பட்டி ருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது, பையில் வைக்கப்பட்டிருந்த ரூ.200 ரொக்கப் பணம் மற்றும் பீரோவில் இருந்த தங்க சங்கிலிகள், மோதிரம் உட்பட 6 பவுன் நகைகள் மாயமானது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்து ஜெயலட்சுமி காரியாபட்டி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். . அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வரு கின்றனர்.

 போடியில் பரவலாக மழை

தேனி, பிப்.3-      போடியில் வெள்ளிக்கிழமை பெய்த பரவலான மழை யால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதி கரித்தது. போடி பகுதியில் வியாழக்கிழமை பகலில் மேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில் மாலையில் லேசான சாரல் மழை பெய்தது. இரவில் பலத்த மழை பெய்தது. அதிகாலை நேரத்திலும் லேசான சாரல் மழை காணப் பட்டது. வெள்ளிக்கிழமை காலை முதல் மேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில் பிற்பகலில் சாரல் மழையுடன் தொடங்கி  பலத்த மழை பெய்தது. மாலையில் பெய்த மழையால் பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு திரும்பும் போது சிரமப்பட்டனர். இரண்டு நாட்களாக பெய்த பரவலான மழையால் போடி கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து  காணப்பட்டது. போடி பகுதியில் தற்போது மாமரங்க ளில் பூக்கள் பூத்துள்ள நிலையில் திடீர் மழையால் பூக்கள் உதிரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மா விவசா யிகள் கவலையடைந்துள்ளனர்.

இராமேஸ்வரம் கோவிலில் ரூ.1.19 கோடி காணிக்கை

இராமநாதபுரம்,பிப்.3- இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் கிழக்கு கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ஒரு மாத காலமாக உண்டியலில் போடப்பட்ட ரூபாய் ஒரு கோடியே 19 லட்சத்து 82 ஆயிரத்து  629 மற்றும் தங்கம் 17.200 கிராம் ,வெள்ளி 710 கிராம் காணிக்கை போடப்பட்டிருந்தது . கோவில் மேலாளர் மாரி யப்பன், ஆய்வாளர் பிரபாகரன் உட்பட கோவில் அலு வலர்கள் பணியாளர்கள் பங்கேற்றனர்.

மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்  பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம்

தேனி ,பிப்.3- ஆண்டிபட்டி அருகே அரசு உயர் நிலைப்பள்ளியில்  கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ வைரலாக பரவியதன் எதிரொலியாக பள்ளி தலைமையாசிரியரை திண்டுக்கல் மாவட்டத் திற்கு பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, அருகே  சக்கம்பட்டி முத்து மாரியம்மன் நகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடி யோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவர்கள் கழிப்பறையில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து கழிப்பறையை விளக்குமாறு கொண்டு சுத்தம் செய்கின்றனர். இதேபோல மாணவி கள் சிலர் பள்ளியின் வளாகத்தை கூட்டி பெருக்குவதுடன், ஒட்டடை அடிக்கும் புகைப்படமும் பரவி வருகிறது.  இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கண்ட மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வேமாக பரவியது. எஸ்எப்ஐ கோரிக்கை இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வேல்பிரகாஷ், முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தார். அதனைத்  தொடர்ந்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன்  விசாரணை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் க.வீ முரளீதரன் ,பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்துவை  விசாரணை நடத்த  உத்தரவிட்டார் .அவர் வியாழனன்று பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இடமாற்றம்  பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து கொடுத்த அறிக்கையின் படி ,மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் மேல் நடவ டிக்கை எடுக்க கல்வித்துறைக்கு பரிந்துரை செய்தார் .அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர் ஜனகராஜை திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

விபத்துக்களை தடுக்க  ரெட்டியார் சத்திரம் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் சிபிஎம் கோரிக்கை

சின்னாளப்பட்டி,பிப்.3- விபத்துக்களை தடுக்க ரெட்டியார் சத்திரம் கன்னிவாடி  காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் ரெட்டியார்சத்திரம் ஒன்றியச் செயலாளர்  சக்திவேல் கூறுகையில், பழநி பாதயாத்தி ரைக்கு பெற்றோருடன் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்த சிறுவன் மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது. காவல்துறையின் மெத்தனத்தால்தான் சிறுவன் உயிரிழந்தான். ஆண்டுதோறும் இப்படிஒரு விபத்து நடந்து வருகிறது மாவட்டக் காவல்துறையை விடவும் ரெட்டியார் சத்திரம் கன்னிவாடி காவல்துறையினர் தான் மிகுந்த அக்கறை எடுத்து விபத்துக்களை தடுக்க வேண்டும்.  பல மாவட்டங்களிலிருந்து நடந்து வரும்  பக்தர்களுக்காக அன்னதானம் மற்றும் இதர இனிப்பு கார  வகைகளை சமூக ஆர்வலர்கள் வாகனங்களில் வந்து  கொடுப்பது வரவேற்கத்தக்கது அப்படிக் கொடுப்ப தற்காக வரும் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுதான் கண்டிக்கத்தக்கது. மாவட்ட நிர்வாகமும் ரெட்டியார் சத்திரம் கன்னிவாடி காவல்துறையும் இப்பிரச்சனையில் உடனே தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மாணவியை கிண்டல்  செய்தவர் கைது

நத்தம், பிப்.3 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி இந்திரா நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 21).இவர் அதே  பகுதியில் 10 வகுப்பு படிக்கும் மாணவியை கேலி, கிண்டல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் பெற்றோரை மிரட்டியுள்ளார்.இதுகுறித்து சிறுமியின் தாயார் நத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை செய்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்கமுனிய சாமி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  ரஞ்சித் குமாரை கைது செய்தார்.

மதுபோதையில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்

மதுரை, பிப். 3- மதுரை தெற்குவெளி வீதி சப்பாணி கோயில் தெரு வைச் சேர்ந்த மீனாட்சிசுந்த ரம் மகள் வர்ஷா(19). இவர் கீரைத்துறை லாடபிள்ளை குறுக்குத் தெருவைச் சேர்ந்த திருக்கண்ணன் மகன் பழனி என்ற பழனிக் குமாரை(28) காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி  2021 செப்டம்பர் மாதம் திரு மணம் செய்து கொண்டார். கணவர் வீட்டில் 40 நாள்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில், பழனிக்குமார் மது போதையில் அடிக்கடி துன்புறுத்தியதால் அவரைப் பிரிந்து தந்தை வீட்டுக்கு வந்து வாழ்ந்துள்ளார். இதையடுத்து பலமுறை பழ னிக்குமார் வந்து அழைத்தும் அவருடன் செல்லவில்லை. இந்நிலையில் வெள்ளி யன்று  பிற்பகலில் பழனிக் குமார் மதுபோதையில் வர்ஷாவின் வீட்டுக்கு  வந்து அவரை அழைத்துள்ளார். இதில் வீட்டுக்கு வெளியே வந்த வர்ஷாவை தன்னு டன் குடும்பம் நடத்த வரு மாறு  பழனிக்குமார் அழைத் துள்ளார். இதற்கு வர்ஷா மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பழனிக் குமார் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் வர்ஷாவில் கழுத்தில் குத்தி விட்டு அங்கி ருந்து தப்பிச்சென்றார். இதில் பலத்த காயமடைந்த வர்ஷாவை குடும்பத்தி னர் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். மருத்துவமனையில் வர்ஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழி யிலேயே உயிரிழந்து விட்ட தாகத் தெரிவித்தனர். இதை யடுத்து வர்ஷாவின் சடலம் பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொ டர்பாக வர்ஷாவின் தந்தை மீனாட்சி சுந்தரம் அளித்தப் புகாரின்பேரில் தெற்கு வாசல் காவல்துறையினர்  கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பழ னிக்குமாரை தனிப்படை அமைத்து தேடி வரு கின்றனர். மதுபோதையில் பழ னிக்குமார் அடிக்கடி தகரா றில் ஈடுபட்டதால், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வர்ஷா இதுதொடர்பாக காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல்துறையினர்  பழனிக் குமாரை அழைத்து விசா ரித்தபோது, வர்ஷாவை இனிமேல் தொந்தரவு செய்யமாட்டேன் என்று தெரி வித்துச் சென்றார். ஆனால் வெள்ளியன்று  திடீரென மதுபோதையில் சென்று வர்ஷாவை கொலை செய்துவிட்டு தப்பிச்சென் றுள்ளார். வர்ஷாவின் புகாரின்பேரில் பழனிக் குமார் மீது அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் கொலைச்சம்பவம் நடந்தி ருக்காது என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மின் வேலியில் சிக்கி  4 ஆடுகள் பலி

சாத்தூர், பிப்.3- சாத்தூர் அருகே தனியார் கட்டிடத்தில் அமைக் கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கியதில் 4 ஆடுகள் பலியா கின. சாத்தூர் அருகே உள்ள சிவசங்குபட்டியைச் சேர்ந்தவர்குட்டிராஜ். இவர் ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள செயல்படாத டாஸ்மாக் கடை அருகே ஆடுகளை மேய்த்துள்ளார்.  அப்போது, ஆடுகள் நிலத்தை சுற்றி அமைக்கப் பட்டிருந்த மின் வேலியில் உரசியுள்ளது. இதையடுத்து, ஆடுகள் மீது மின்சாரம் பாய்ந்ததாம். அப்போது அங்கிருந்த பரமசிவம், கிருஷ்ணன் ஆகியோரின் உதவியுடன் ஆடுகளை கம்பை வைத்து மீட்டுள்ளனர். ஆனால், 4 ஆடுகள் மின்சாரம் தாய்கியதில் பலியா கின. இதுகுறித்து குட்டிராஜ் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னுச்சாமி என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு  10 ஆண்டு சிறை

 விருதுநகர், பிப்.3- மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கும் தூண்டிய கணவருக்கு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குற்றாலிங்கம். இவரது மகன் கணேஷ்ராம்(27). இவர் தனது மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்துள் ளார். மேலும், அவரை தற்கொலை செய்து கொள்ள தூண்டியுள்ளார். இதையடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேஷ்ராமை கைது செய்தனர். இந்த வழக்கானது, திருவில்லிபுத்தூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கணேஷ்ராமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.