districts

img

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களோடு மே தின கொண்டாட்டம்

மதுரை மே 1-  மதுரை மாவட்டத்தில் தே.கல்லுப்பட்டி, பேரையூர், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, அவனி யாபுரம், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து தொழி லாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் இணைந்து மே தின விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். புறநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் மேதினக்கொடியை கிளைச் செயலாளர் கரைச்சாமி ஏற்றினார். செல்லம்பட்டி ஒன்றியக்குழு சார்பில் செல்லம்பட்டியில் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், ஒன்றியக் குழு அலுவலகத்தில் ஒன்றியச்  செயலாளர் வி.பி.முருகன், கருமாத்தூரில் மாவட்டக் குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப் பாண்டி ஆகியோர் கொடியேற்றினர்.  ஒன்றி யத்தில் 23 இடங்களில் கொடியேற்றப் பட்டது. 

மேற்கு ஒன்றியக்குழு சார்பில் சமய நல்லூர், பொதும்பு, எஸ்.ஆலங்குளம், சத்தியமூர்த்தி நகர், குலமங்கலம், பணங்காடி சாந்திநகர் உட்பட 28 இடங்களில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்வுகளில்  மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பால கிருஷ்ணன், சி.மலர்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்று மேதினக் கொடியேற்றினர். வாடிப்பட்டி ஒன்றியக்குழு சார்பில் குருவித் துறை. மன்னாடிமங்கலம், சோழ வந்தான், திடீர் நகர், ஆணைகுளம் உட்பட 27 இடங்களில் கொடியேற்றப்பட்டது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், யில் ஒன்றியச் செயலாளர் ஏ.வேல்ப்பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்று மேதினக்கொடிகளை ஏற்றி வைத்தனர். திருமங்கலம் தாலுகா குழு சார்பில் கப்பலூர், சாத்தங்குடி, புங்கங்குளம், உச்சபட்டி  உட்பட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில்   ஒன்றியச் செயலாளர் ஆர். மூர்த்தி  உள்ளிட்ட பலர் பங்கேற்று கிரா மங்கள் கொடியேற்றினர்.  கள்ளிக்குடி ஒன்றியக்குழு சார்பில் திரு மால் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பி. ராஜேந்திரன் கொடியேற்றினார். 

உசிலம்பட்டியில் உசிலம்பட்டி நகர்  கிளை, கட்சி அலுவலகம், குன்னத்துப் பட்டி, தொட்டப்ப நாயக்கனூர்,  உத்தப்ப நாயக்கனூர் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்வுகளில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செ.முத்து ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்று மேதினக் கொடியேற்றினர். திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, நாகமலைப்புதுக்கோட்டை, வெள்ளைப் பாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் நடைபெற்ற மே தின கொடியேற்று நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர் சி.ராம கிருஷ்ணன், மாநகராட்சி மாமன்ற உறுப்பி னர் மாமன்ற உறுப்பினர் என்.விஜயா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவி,   தாலுகா  செயலாளர் எம்.ஜெயக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் வி.முத்துராஜ், க.பிரேமலதா ஆகியோர் பங்கேற்று செங் கொடிகளை ஏற்றிவைத்து சிறப்பித்தனர். அவனியாபுரம், ஐராவதநல்லூர், விரகனூர், சிந்தாமணி, அவனியாபுரம் கட்சி அலுவலகம், பிரசன்னா காலனி உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடை பெற்ற மேதின கொடியேற்று நிகழ்வுகளில் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன்,  தாலுகா செயலாளர் ஏ. தனபாலன் ஆகியோர் பங்கேற்று கொடி யேற்றினர்.

அலங்காநல்லூர், பாலமேடு, சேந்த மங்கலம், முடுவார்பட்டி, கொண்டயம்பட்டி உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடை பெற்ற மே தினக் கொண்டாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.உமா மகேஸ்வரன், ஒன்றியச்  செயலாளர் எஸ்.ஆண்டிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று செங்கொடிகளை ஏற்றினர்.   தே.கல்லுப்பட்டி ஒன்றியக்குழு சார்பில்  தே.கல்லுப்பட்டி,  டி.குன்னத்தூர் உட்பட  15-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடி யேற்றப்பட்டது. மே தின நிகழ்வில் தே. கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளர் வி.சம யன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.  சேடபட்டி, எழுமலை, அத்திபட்டி, அனைகரப்பட்டி உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றப்பட்டது. அத்திபட்டியில் ஒன்றியச் செயலாளர் காசிமாயன் கொடியேற்றினார்  மேலூர் தாலுகாவில் மேலூர் நகர்,  தும்பைபட்டி, வெள்ளலூர் உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களில் கொடியேற்றப் பட்டது. கொடியேற்று நிகழ்வுகளில் எம்.கண்ணன், சி.அடைக்கன், சி.எஸ்.மணி ஆகியோர் கலந்து கொண்டனர். 

சிஐடியு

சிக்கந்தர்சாவடி அருகே உள்ள தின மணிநகரில் சிஐடியு சார்பில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் பி.ஜீவானந்தம் கொடியேற்றினார். கமலக்கண்ணன், அழகர், எஸ்.சரஸ்வதி, பகத்சிங், கோரி, கோபாலகிருஷ்ணன், ஏ.ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலூரில் அரிட்டாபட்டி சூப்பர் ரப்பர் மில், சிட்டம்பட்டி டோல்கேட் பிளாசா,  பேருந்து நிலைய ஆட்டோ நிலையம், கீழையூர் டாட்டா ஏசி ஸ்டாண்டு,  அரசுப் போக்குவரத்துப் பணி மனை ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது.  சிஐடியு தலைவர் எஸ்.பி.மணவாளன், செயலாளர் வி.சேகர் பொருளாளர் பிரசாந்த் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அலங்காநல்லூரில் சிஐடியு ஆட்டோ நிலையம், வேன் நிலையம் ஆகிய ஆகிய வற்றில் ஆட்டோ-சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் மலை.கண்ணன் கொடியேற்றி னார். திருமங்கலம் மார்க்கெட்டில் மார்கெட்  சங்கம் சார்பில் சிஐடியு கொடியேற்றப் பட்டது.