districts

img

விலை வீழ்ச்சியால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கைக்காய்கள்

ஒட்டன்சத்திரம், ஏப்.7-  ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிக வரத்தால் விலை வீழ்ச்சியடைந்து முருங் கைக்காய்கள் கால்நடைகளுக்கு தீவ னமாக வழங்கப்படும் அவலம் ஏற்பட்டுள் ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, கோவிந்தாபுரம், அய்யம் பாளையம்,  கள்ளிமந்தையம் உள்ளிட்ட பல்வேறு  கிராமங்களில் முருங்கைக்காய் சாகுபடி செய்யப்படுவது. இங்கிருந்து மார்க்கம்பட்டி, ஒட்டன் சத்திரம் பகுதியில் செயல்படும் சந்தைக ளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப் பட்டு வியாபாரிகளிடம், விவசாயிகளால் விற்பனை செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும்  வெளி மாநி லங்களுக்கும் முருங்கைக்காய் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது முருங்கைக்காய் அதிக விளைச்சலால்  மார்க்கெட்டுக்கு அதிகளவு முருங்கக்காய் கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரத்து குறைவாக இருந்ததால் ஒரு கிலோ 100 ரூபாய் வரை முருங்கை விற்றது. அதிக  வரத்தால் நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ  செடி முருங்கை 12 ரூபாய்க்கும், மர முருங்கை 8 ரூபாய்க்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சந்தைகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்துச் செலவுக்குக் கூட  கட்டுப்படியாகாததால் வேறு வழி இன்றி விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீவன மாக கொடுத்துவருகிறார்கள்.

முருங்கைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர்.  இது குறித்து கோவிந்தாபுரம் விவசாயி செல்வானத்தம் கூறுகையில், எங்கள் பகுதியில் விளையும் முருங்கைகாய்கள் மிகவும் சுவையானவை மட்டுமல்ல பிரபல மானவையும் கூட. குறைந்த வரத்து வரும்போது அதிகவிலைக்கு விற்பனை யாகிறது. அதிக வரத்தின்போது மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. எங்கள் பகுதியில் முருங்கைக்காய் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலை அமைத்தால் இப்பகுதி முருங்கை விவசாயிகள் பயன்பெறுவர்.  விவசாயிகளின் சீசன் காலங்களில் அதிக அளவில் விளையும் இந்த முருங்கையை பவுடர் ஆக்கி ஆண்டு முழுவதும் பயன் படுத்தலாம். இதனால் சீசன் காலங்களில் விற்பனையாகாமல்  தேங்கி வீணாகும் முருங்கையை பவுடர் செய்து பயன்படுத்த இந்த பகுதியில் அரசே ஒரு பவுடர் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசே முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைத்து முருங்கை விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.