districts

மதுரை முக்கிய செய்திகள்

போடியில் தீயணைப்புத் துறை பணியாளர் குடியிருப்பு  காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

தேனி, செப்.7- தீயணைப்பு-மீட்பு பணிகள் துறையின் சார்பில் போடி நாயக்கனூரில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்  பட்டுள்ள 10 பணியாளர் குடியிருப்புகளை திங்களன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா, தேனி மக்களவை உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர். இக்குடியிருப்பு கட்டடமானது 12,697 சதுர அடியில்,  2 அலுவலர் குடியிருப்பு மற்றும் 8 பணியாளர் குடியிருப்பு கள் என 2 கட்டடங்களாக, தேவையான அடிப்படை வசதி களுடனும், மழைநீர் சேகரிப்பு வசதிகளுடன் கட்டப் பட்டுள்ளது. இந்நிகழ்வில், நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் விவேகானந்தன், உதவி மாவட்ட அலுவலர் குமரேசன், நகராட்சி ஆணை யாளர் ராஜலெட்சுமி,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆண்டிபட்டி: விபத்தில் 2 பேர் பலி

தேனி, அக்.7- ஆண்டிபட்டி அருகே வருசநாடு பகுதியைச் சேர்ந்த  விவசாயி ராம்குமார் (38). இவர் தனது மனைவி ரமணா தேவி(32) மற்றும் மகன் மிதுல் ஸ்ரீராம்(2) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் தேனி வந்து விட்டு ஊர் திரும்பிக்  கொண்டிருந்தார். அரண்மனைப்புதூர்-கோட்டைப்பட்டி சாலையில் முன்னால் சென்ற கார் மீது இரு சக்கர வாகனம் மோதியது.  இதில் அனைவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது எதிரே வந்த ஜீப் ராம்குமார், மிதுல்ஸ்ரீராம் மீது  ஏறியது. தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர். காயமடைந்த ரமணாதேவி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார். பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசா ரித்து வருகின்றனர்.

குப்பை துர்நாற்றத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம்

சின்னாளப்பட்டி, அக்.8- இராமராஜபுரம் ஊராட்சி மீனாட்சிபுரம் பிரதான சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட இராமராஜபுரம் ஊராட்சி ஆர்.மீனாட்சி புரத்திலிருந்து கல்லடிபட்டி செல்லும் பிரதான சாலையில்  அரசு உதவிபெறும் பள்ளி உள்ளது. எப்போதும் பர பரப்பாக காணப்படும் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகளால் மழை காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையால் நீர்நிலைகள், வயல்வெளி கள் பாதிக்கக்கூடும் என்பதாலும் திங்களன்று முதல் பள்ளி கள் திறந்துள்ளதால் பள்ளி குழந்தைகள் அதிகம் பயன்  படுத்தும் இச்சாலையோரத்தில் கொட்டப்படுள்ள குப்பை களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரையில் சுமைதூக்கும் தொழிலாளி கொலை

மதுரை, அக். 7- மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் சங்கர் தெருவைச்  சேர்ந்த ஜேசு பெரியசாமி மகன் கதிரவன் என்ற குட்டை  அஜீத் (24). பரவை காய்கனிச் சந்தையில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் குட்டை அஜீத் ஞாயிற்றுக்கிழமை வைகை ஆற்று பாலத்தின் கீழ்ப்பகுதியில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். தகவலின் பேரில் செல்லூர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  மேலும் இதுதொடர்பாக ஜேசு பெரியசாமி அளித்த  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை  நடத்தினர். விசாரணையில், குட்டை அஜீத் மீது செல்லூர்,  தல்லாகுளம் காவல்நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதும், கடந்த ஜூலை மாதம் சிறை யில் இருந்து பிணையில் வந்ததும் தெரியவந்தது. மேலும்,  மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த விக்னேஷ் (22) என்பவரை தாக்கியதாக அவருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதை மனதில் வைத்திருந்த விக்னேஷ், ஞாயிற்றுக்கிழமை இரவு  குட்டை அஜீத்தை  மது அருந்த அழைத்துச்சென்று அவரைத் தாக்கி தலையில்  கல்லைப்போட்டு   கொலை செய்தது தெரியவந்தது. இதை யடுத்து காவல்துறையினர் திங்களன்று  விக்னேஷை கைது  செய்து சிறையில் அடைத்தனர்.

முறைகேடான வகையில் சான்றிதழ் பெற்று அரசுப் பணியில் சேர்ந்த 9 பேர் வழக்கு

மதுரை, அக்.7- மதுரை காமராஜர் பல்க லைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் முறை கேடாக தமிழ்வழிக்கல்விச் சான்றிதழ் பெற்று அரசுப் பணியில் சேர்ந்துள்ள வரு வாய்க் கோட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், ஆட்சியரின் தனி உதவியாளர், வணிக வரி உதவி ஆணையர், பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறை  வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டில் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வு  வாரியத்தின் சார்பில் நடை பெற்ற குரூப் - 1 தேர்வில், தமிழ்  வழிக் கல்வியில் பயின்றோ ருக்கான பணி ஒதுக்கீட்டில் அர சுப்பணி பெற்ற சிலர் தேர்வில்  முறைகேடு செய்திருப்பதாக வும், இதுதொடர்பாக விசா ரணை நடத்த வேண்டும் என்  றும் உயர்நீதிமன்ற மதுரைக்  கிளையில் வழக்குத் தொட ரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி மதுரை ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டடது. அதன்பேரில்  மதுரை ஊழல் தடுப்புப்பிரிவி னர் தீவிர விசாரணை மேற்  கொண்டனர். விசாரணையில்,  மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் தமிழ் வழிக்கல் வியில் பயின்று தேர்ச்சி பெற்று குரூப் - 1 தேர்வில் அரசுப்பணி பெற்ற 4 பேர் முறைகேட்டில் ஈடு பட்டிருப்பது தெரியவந்தது. இதில் மதுரையில் வணிக  வரித்துறை உதவி ஆணைய ராக பணிபுரிந்து வரும்  சொப்னா (மாற்றுப்பாலினத்த வர்), கோவை மாவட்ட ஆட்சிய ரின் தனி உதவியாளராக பணி புரிந்து வரும் என்.ஏ.சங்கீதா, சேலம் மாவட்டம் ஆத்தூர்  காவல் துணை கண்காணிப்பா ளராக பணிபுரிந்து வரும் கே.சி.சதீஷ்குமார், முன்னாள் காவல் துணைக் காணிப்பாளரும், தற்போது காஞ்சிபுரம் பயிற்சி வருவாய் கோட்டாட்சியராக உள்ள எம்.கலைவாணி ஆகிய நால்வரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.  இதில் சொப்னா, இளங் கலை படிப்பில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளை மதுரையில்   உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் பயின்ற நிலை யில், மதுரை காமராஜர் பல்க லைக்கழகத்தின் தொலை நிலைக்கல்வி இயக்ககத்தில் இளங்கலை தமிழ் படிப்பில் சேர்ந்துள்ளார். மேலும் ஒரே  ஆண்டில் தேர்வெழுதி அனைத்  துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.  பல்கலைக்கழக விதிகளின் படி பல்கலைக்கழகத்தில் படிப்பில் சேரும்போதே கல்விக்  கட்டணம் உள்ளிட்ட கட்டணங்க ளையும் முறையாக செலுத்த வில்லை. இதேபோல காவல் துணைக் காணிப்பாளர் சதீஷ்குமாரின் மதிப்பெண் பட்டியலில் பல்வேறு திருத்தங் கள் உள்ளன. மேலும் காஞ்சி புரம் வருவாய்க் கோட்டாட்சியர் எம்.கலைவாணி, கோவை மாவட்ட ஆட்சியரின் தனி உதவி யாளர் என்.ஏ.சங்கீதா ஆகி யோரும் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் சேர்க்கை மற்றும்  கல்விக்கட்டணங்களை முறை யாக செலுத்தாமல் தேர்வெழுதி  தமிழ்வழிக்கல்வி சான்றிதழ் பெற்றுள்ளது தெரியவந்தது. இவர்கள் நால்வருக்கும் முறை கேடாக தமிழ்வழிக் கல்வி சான்றிதழ் வழங்கியதற்கு உடந்தையாக இருந்ததாக காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் முதுநிலை கண்கா ணிப்பாளர் ஆர்.சத்தியமூர்த்தி, தொலைநிலைக்கல்வி இயக்கக எஸ்சி, எஸ்டி பிரிவு  கண்காணிப்பாளர் கே.புரு சோத்தமன், தேனியைச் சேர்ந்த கல்வி நிறுவன நிர்வாகி  ஏ.முரளி, ஆர்.நாராயணபிரபு, கோவையைச் சேர்ந்த கல்வி  நிறுவன நிர்வாகி ஏ.ராஜேந்தி ரன் ஆகியோர் இருந்துள்ளதும் தெரியவந்தது.  இதையடுத்து வணிகவரி உதவி ஆணையர் சொப்னா,  காவலர் கே.சி.சதீஷ்குமார், காஞ்சிபுரம் வருவாய் கோட்  டாட்சியர் எம்.கலைவாணி, கோவை மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் என்.ஏ. சங்கீதா மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் உள்பட 9 பேர்  மீதும், மதுரை ஊழல் தடுப்புப்  பிரிவு காவல்துறை முறை கேடாக அரசுப்பணி பெற்றது  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.