districts

img

ஆகாயத் தாமரையை அழிக்கவே முடியாதா...?

மதுரை, ஆக. 13-  ஆகாயத் தாமரை எனப்  படும் செடியானது, ஏரிகளி லும், குளங்களிலும் நிறைய  காணப்படுகிறது. இது வந்து விட்டால், ஏரி முழுவதும் பரவி, நீரே தெரியாதவாறு மூடி விடும். நீரும் கெட்டு விடும். ஆகாயத்தாமரையை கற்பூரவல்லி இலையைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும் என்றும். ஆகா யத்தாமரையை இயற்கை உரமாக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.  நீர்நிலைகளில் ஆகா யத்தாமரைகளை அழிப்பது எப்படி? நீர்நிலைகளில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ, ஆகாயத்தாமரைகள் மட்டும் செழித்து வளர்ந்திருக்கும். மடைகளிலும், மதகுகளை யும் அடைத்தபடி வளர்ந்தி ருக்கும் இவற்றை அழிப்பது  சவாலான விஷயம். நிலத்தில் பயன்படுத்தக்  கூடிய களைக்கொல்லி களை நீர்நிலைகளில் பயன்படுத்தினால் ஆகா யத்தாமரைகள் இறந்து விடும். அதில் மீன்கள் வளர்க்க முடியாது.  மாட்டுத்தீவனத்துடன் பத்து சதவீதம் கலந்து கொடுக்கும் போது அவற்  றின் ரத்தத்திலோ, செல் களிலோ பிரச்னை இருப்ப தில்லை. இலைகளை மட்கச் செய்து உரமாக்கியும், பசுந்  தாள் உரமாகவும் நிலத்தில் பயன்படுத்தலாம். கூன் வண்டு, புல்கெண்டை மீன்  ஆகாயத்தாமரை இலை களின் மெழுகு போன்ற பகு தியை கூன் வண்டுகள் அரித்துத் தின்றுவிடும். நீர்நிலைகளில் 10-15 நாட்க ளுக்கு கூன்வண்டுகளை விட  வேண்டும்.

அதன்பின் கற்பூரவல்லி இலையை பவுடராக்கி அதன் சாற்றை 30 சதவீதம் தெளிக்க வேண்டும். இதன்  வேதிக்குணம் ஆகாயத் தாமரை வேர் வழியாக இலைக்குள் எளிதாகச் சென்று நுண்ணுாட்டச் சத்துக்களை வெளியேற்றி சுருங்கி கருகச் செய்து விடும். புல்கெண்டை மீன்  கள் மூலமும் ஆகாயத் தாம ரையைக் கட்டுப்படுத்தலாம்  ஆகாயத் தாமரை தோல்நோய்களை போக்க கூடியது. மூலநோய்க்கு மருந்தாகிறது. சிறுநீர்த் தாரையில் உண்டாகும் தொற்றுக்களை போக்க வல்லது. தோல் நோய்க்கு மருந்தாகிறது. ஆகாயத்தாமரையின் இலைகள் உள், வெளி  மருந்தாகப் பயன்தருகி றது. பல்வேறு நன்மை களைக் கொண்ட ஆகா யத்தாமரையைப் பயன் படுத்தி உடல் நலம் பெற லாம். படிகாரத்தைப் பொடித்து எடுத்து, சிறிது சுண்ணாம்பு சேர்த்து நன்றா கக் கலக்கி வண்டுக்கடி, தேள் கடி உள்ள இடத்தில்  பூசினால் வலி, நீங்கும். வீக்கம் குறையும். விஷம்  முறியும் என்று ஆலோசனை கள் வைக்கப்பட்டு வரு கிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட ஆகாயத்தாமரை நீர்நிலைகளில் நிரம்பிக் கிடக்கிறது. இதை அப்பு றப்படுத்தும் மாநகராட்சி, நக ராட்சி நிர்வாகங்கள் அவற்றை குப்பை போல் போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள்  குப்பைகளை மக்கும், குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்கு கிறார்கள். பயன்பாடு உள்ள  செடிக மூலம் உரம் தயாரிக்க லாம். ஆற்றுப்படுகைகள் குளங்களில் உள்ளவை களை முறையாக அப்புறப் படுத்தி பயன்படுத்த வேண்டும்.  மதுரை வைகையாற்றில் பல இடங்களில் ஆகாயத் தாமரை வளர்ந்து நீர் நிலை யை மாசுபடுத்தி வருகிறது. அவற்றை அப்புறப்படுத்தி பயன்தருபவையாக மாற்ற வேண்டும். ஆகாயத்தாமரையிலி ருந்து பயோமெட்ரிக் டீசல் தயாரிக்கலாம் என்று கூறு கிறார்கள். அறிவியல் பூர்வ மாக இது சாத்தியமா என அரசு யோசிக்கலாம்.