districts

தேனி அருகே பேருந்துகள் மோதி விபத்து : 15 தொழிலாளர்கள் காயம்

தேனி, டிச.10- தேனி அருகே தனியார் மில் பேருந்து மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி  விபத்துக்குள்ளானதில் 15 தொழிலா ளர்கள் படுகாயமடைந்தனர். போடியில் இருந்து தேனி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் தொழிற் சாலைக்கு சொந்தமான பேருந்து மாரி யம்மன் கோவில்பட்டி விலக்குப் பகுதி யில் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டி ருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் கல்லூரியின் பேருந்து பின்பக்கம் மோதியது. இதில், தொழிற்சாலைக்கு சொந்த மான பேருந்து அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் மோதி, அருகில் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழாமல் நின்றது. இதன் காரணமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்தபோதி லும்  பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மீட்கப் பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதனிடையே அவ்வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் முரளீதரன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்தினார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.