districts

img

வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டி தருக!

நாகர்கோவில், ஜூலை 2- கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரம் பூதப்பாண்டி யில் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மக்கள் நலன் சார் கோரிக்கைகளை முன்வைத்து தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், விதொச வட்டாரச் செயலாளர் எஸ்.மிக்கேல், மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன், மாவட்டச் செய லாளர் மலைவிளை பாசி உள்ளிட் டோர் பேசினர். இதில், ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஊரக வேலைத்திட்டத்தில் ஆண்டிற்கு 150 நாட்கள் வேலை வழங்க  வேண்டும், நீர்நிலை புறம்போக்கு களில் வசிப்போருக்கு மாற்றிடமும், வீடும் வழங்க வேண்டும், வீடில்லாத ஏழை மக்களுக்கு தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும், நீர்ப்பிடிப்பு இல்லாத இடங்களை வகை மாற்றம் செய்து பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

;