மதுரை, ஜூலை 20- பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து மதுரையில் வியா ழனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது பிஎஸ்என்எல்-லுக்கு சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்க ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களை, முறையாகப் பயன்படுத்த வேண்டும். கிளஸ்டர் அவுட் சோர்சிங் முறையில் பணி புரி யும் தற்காலிக மற்றும் ஒப் பந்த தொழிலாளர்களுக்கு அரசு விதிகளின் படி ஊதி யம், பலன்கள் வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மதுரை தல்லா குளம் பிஎஸ்என்எல் அலு வலகத்தில் ஒப்பந்தத் தொழி லாளர் சங்க மாவட்டத் தலை வர் உத்தரகுமார் தலைமை யில் வியாழன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ரிச்சர்ட், ஒப் பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சித்திரை மணி பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வின் சத்ய ராஜ், ஒப்பந்தத் தொழிலா ளர் சங்க மாவட்ட நிர்வாகி நாகராஜ் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.