districts

img

கன்னிவாடியில் பூட்டியேக் கிடக்கும் கழிப்பறை

சின்னாளபட்டி, ஜூன் 4- திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூ ராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் பல வார்டுகளில் கழிப்பறையே இல்லை. சில  வார்டுகளில் கழிப்பறை பூட்டியேக் கிடக்  கின்றன. இதனால் மக்கள் அவதிப்படு கின்றனர். கன்னிவாடி பேரூராட்சி 1 ஆவது வார்டில் உள்ள ஒட்டக்கோவில்பட்டியில் பெருமளவில் தலித் மக்கள் வசிக்கின்றனர்.  இங்கு பெண்களுக்கான கழிவறை பூட்டி யேக் கிடக்கிறது. இதனால் அவர்கள் அவ திப்படுகின்றனர். கழிப்பறை குறித்து பல முறை நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லையென்றும் கன்னி வாடிப் பேரூராட்சியில் 3 மாதத்திற்குள் 4 செயல் அலுவலர் மாற்றப்பட்டார்கள். தற்போது செயல் அலுவலராக இருக்கும் ஜெயமாலு மற்றும் தலைமை எழுத்தர் அலுவலகத்துக்கே வருவதில்லை .அப்படி வந்தார்கள் என்றால் காரில் இருந்து கொண்டே உதவியாளர் கொண்டு வரும் பைல்களில் கையெழுத்திடுவார்கள். வார்டு கவுன்சிலர்கள் தாங்கள் வார்டு களுக்கு தேவையானவற்றை கேட்டால் தலைவரைப் பாருங்கள் என்று ஒற்றை வார்த்தையால் பதில் சொல்லும் நிலைமை உள்ளது. இப்போக்கு தொடர்ந்து நீடித்தால், செயல் அலுவலரை காணவில்லை என்று சுவரொட்டிகள் ஒட்டி, போராட்டத்தில் ஈடு பட வேண்டிய நிலைமைதான் வரும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டி யார்சத்திரம் ஒன்றியச் செயலாளர் கே.எஸ். சக்திவேல் தெரிவித்துள்ளார்.