திருவில்லிபுத்தூர், மே 10- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் இல் லம் தேடிக் கல்வி மையங்க ளுக்கு வரும் மாணவர் களுக்கான “கோடை புத்தக வாசிப்புக் கொண்டாட்டம்” நிகழ்ச்சி புதன்கிழமையன்று கிளை நூலகத்தில் நடை பெற்றது. திருவில்லிபுத்தூரில் செயல்பட்டு வரும் தைலா குளம், என்.ஜி.ஓ. காலனி, பெருமாள்பட்டி, மடவார் வளாகம், இனாம்கரிசல் குளம் உள்ளிட்ட இல்லம் தேடிக் கல்வி மையங்களின் தன்னார்வலர்கள், தங்களது மையத்திற்கு வரும் மாணவ மாணவியரை திருவில்லி புத்தூரில் உள்ள அரசு நூல கத்திற்கு புதன்கிழமை அழைத்து வந்தனர். இவர்களை நூலகர் மல ரவன் வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் விளக்கி பேசினார். அப் போது அவர் கூறுகையில், வாரம் தோறும் நூலக புத்த கங்களை வாசிப்பதற்கென ஒரு பாடவேளை ஒதுக்கப் படுகிறது. வாசித்த புத்த கங்களிலிருந்து புதிர் போட்டி கள் நடத்தப்படுகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். தன்னார்வலர்கள் தங்க ளது சொந்தப் பணத்தில் மாணவர்களை ஆர்வத்து டன் நூலகத்திற்கு அழைத்து வந்ததை, நூலகத்திலிருந்த வாசகர்கள் பாராட்டினர்.