சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சிவகங்கை நகராட்சி சார்பாக ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கப்பட்டன. நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் புத்தகங்கள் வாங்கினர். இந்நிகழ்வில் நகர் மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், நகர் மன்ற ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீஸ்வரி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சிஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.