districts

img

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விரைவில் போனஸ்: மேயர், ஆணையரிடம் சிஐடியு நேரில் வலியுறுத்தல்

திருப்பூர், அக். 14 -  திருப்பூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிறுவ னங்கள் விரைவில் போனஸ் வழங்க உரிய நட வடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி மேயர் மற் றும் ஆணையரிடம் சிஐடியு நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தினர். சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி, மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் மற்றும் மாவட்டப் பொருளாளர் ஜி.சம்பத் ஆகியோர் வெள்ளியன்று திருப்பூர் மாநக ராட்சி மேயர் ந.தினேஷ்குமார், ஆணையர் கிராந்திகுமார் பாடி ஆகியோரை நேரில் சந் தித்து மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை குறித்து மனு கொடுத்தனர். தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என ஒப்பந்த நிறு வனங்களுக்கு அறிவுறுத்திய பிறகும் இது வரை போனஸ் வழங்கப்படவில்லை. தீபா வளி பண்டிகைக்கு இன்னும் 10 தினங்களே இருக்கும் நிலையில் விரைவில் போனஸ் வழங்கவும், ஆட்சியர் அறிவித்த தினசரி ஊதியம் வழங்கவும், இபிஎப் பிடித்தம் செய் வதில் ஒப்பந்ததாரர் பங்குத் தொகை செலுத் துவதை உறுதிப்படுத்தவும், ஒருங்கிணைக் கப்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்க ளுக்கு தணிக்கை ஆட்சேபணை என குறைக் கப்பட்ட ஊதியத்தை, உரிய நடவடிக்கை எடுத்து முழுத்தொகை வழங்கவும், அப்பகுதி  குடிநீர் பணியாளர்களுக்கு இபிஎப் பிடித்தம்  செய்யவும், சம்பள ரசீது வழங்கவும், ஒருங் கிணைக்கப்பட்ட பகுதியில் உள்ள 125 ஊழி யர்களை பணி வரன்முறை செய்து ஊதியம்  வழங்கவும் வலியுறுத்தப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விரைவில்  போனஸ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வும், ஆட்சியர் நிர்ணயித்த ஊதியம் வழங்கு வது குறித்து மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக வும் மாநகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் தெரி விக்கப்பட்டதாக சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் கூறினார்.