நடிகரை கடத்தி தாக்கிய பாஜக குண்டர்கள்
மதுரை, ஜூன் 18- மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரு கிறார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக் கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் இவரை சிலர் காரில் கடத்தி, நாராயணாபுரம் கண்மாய் பகுதியில் வைத்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு கால்களில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பி னர். தாக்குதல் நடத்திய இடத்தில் அந்த கும்பல் காவித்துண்டை விட்டுச்சென்றனர். தல்லாகுளம் உதவி ஆணையர் ஜெகன்நாதன் தலைமையிலான காவல்துறை யினர் நடத்திய விசாரணையில் . வெங்கடேஷ் திமுகவுக்கு ஆதரவாக பாஜகவுக்கு எதிராக சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்ததால் பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்ட னர் என கூறப்பட்டது. எனினும், முதற்கட்ட விசாரணை யில், மனைவி தூண்டுதலால் வெங்கடேஷ் தாக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது மோகன் உட்பட ஐந்து பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். வெங்கடேஷ் மனைவியிடம் விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறை தரப்பில் கூறப் பட்டது.
நீதிபதி இல்லம் முன்பு அடாவடி பாஜக மாவட்ட தலைவர் உள்பட 43 பேர் மீது வழக்கு
மதுரை, ஜூன் 18- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதற்காக பாஜக மாநி லச்செயலாளர் எஸ்.ஜி.சூர்யா என்பவரை காவல்துறை யினர் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். நீதிமன்ற காவல் அளிக்கப்பட்ட நிலையில் நீதிபதி வீட்டின் முன்பாக பாஜகவினர் காவல்துறையினர் வாக னத்தை மறைத்து அடாவடியில் ஈடுபட்டனர். இதனால் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகாசுசீந்திரன் மற்றும் 42 பாஜகவினர் மீது ஞாயிறன்று தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தவர் கைது
திருவில்லிபுத்தூர், ஜூன் 18- திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சார்புஆய்வா ளர் கணேசன் தலைமையிலான காவல்துறையினர் திரு வண்ணாமலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழி யாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் 195 கிலோ மதிப்பிலான பல்வேறு கம்பெனிகளுடைய புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.காரில் இருந்த ஆராய்ச்சி பட்டி தெருவைச் சேர்ந்த கலைச்செல் வன் என்பவரை கைது செய்தனர். புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் இரண்டு செல்போன்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்து கலைச் செல்வனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
முகம் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு
திருவில்லிபுத்தூர், ஜூன் 18- இராஜபாளையம் சத்திரப்பட்டி அருகே சங்கர பாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி. இவர் லோடுமேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 16 அன்று வீட்டை விட்டு சென்றவர், திரும்பி வரவில்லை இவரது மனைவி முனீஸ்வரி மற்றும் உறவினர்கள பல்வேறு இடங்களில் தேடினர்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மொட்ட மலை அருகே பெட்ரோல் பங்க் பின்புறம் முற்றிலும் முகம்சிதைந்த நிலையில் எலும்பு கூடான ஆண் பிரேதம் கிடைப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பார்த்தனர். பிரேதத்தை கைப்பற்றி மருது ஈஸ்வரி என்று பச்சை குத்தியதை வைத்து அடையாளம் கண்டுபிடித்தனர் உடனடியாக மருது பாண்டியின் தந்தை ஜோதி முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்னி யம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
ஜூலை 2 இல் நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்
திருநெல்வேலி, ஜூன் 18- நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆனிப்பெருந்திருவிழா வெகு விமரிசை யாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது நடை பெறும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆனிப்பெருந் திருவிழா வருகிற 24 ஆம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்து டன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 2 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறு கிறது. இதையொட்டி தேர்கள் தயார் செய்யப்பட்டு வரு கிறது. அம்பாள் தேர் சாரம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. சுவாமி தேர் சீராக ஓடுவதற்கு தேவையான அடிப்படை வேலைகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தேர்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீர் டேங்கர் லாரி யுடன் வந்தனர். அவர்கள் விநாயகர், முருகர், நெல்லை யப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்த னர். இதை தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடை பெற இருக்கிறது.திருவிழா, தேரோட்டத்துக்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.
விபத்தில் ஒருவர் சாவு
திருநெல்வேலி ,ஜூன் 18- பாளை சித்திரை வேலைக்கார தெருவை சேர்ந்தவர் சரவண கார்த்திகேயன் ( 50), பெயிண்டர். இவர் பாளை வடக்கு ஐகிரவுண்டு ரோட்டில் உள்ள கேன்டீன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சரவண கார்த்திகேயன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற் றுக்கிழமை காலை சரவண கார்த்திகேயன் இறந்தார்.
குளத்தில் மண் அள்ளிய லாரி பறிமுதல்
தஞ்சாவூர், ஜூன்.18 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வாத்தலைக்காடு நொச்சிக்குளத்தில் குளத்தை வெட்டி மண் அள்ளுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆய்வாளர் காவேரிசங்கர், உதவி ஆய்வாளர் வாகீஸ்வரன் மற்றும் காவல்துறை யினர் சோதனைக்குச் சென்றபோது, இரவு நேரத்தில் வாத்தலைக்காடு ஆஞ்சநேயர் கோவில் அருகே குளத்தில் மண் அள்ளி ஏற்றிவந்த லாரியை மடக்கி பிடித்தனர். குளத்தில் மண் அள்ள மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதியும், டிப்பரில் மட்டுமே அள்ள வேண்டும் என்ற விதிகளுக்கு மாறாக இரவு நேரத்தில் லாரியில் அள்ளி வந்ததால் லாரியை பறி முதல் செய்து, ஓட்டுநர் ஹரிஹரனை (28) கைது செய்தனர்.
பார்சல் சாப்பாட்டில் பிளேடு உணவகத்தில் அதிகாரி ஆய்வு
மதுரை, ஜூன் 18- மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி சனிக்கிழமையன்று ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பாடு பார்சல் ஒன்றை வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்சலை பிரித்து பார்த்த போது பாதி உடைந்த பிளேடு துண்டு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உணவகத்திற்கு நேரில் சென்று கேட்ட போது வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முகமது உணவுப்பாதுகாப்புத்துறைக்கு கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முக மது மனைவி ஆர்டர் செய்த உணவை சோதனை செய்த தோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். இது குறித்து மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயவீர பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறு கையில், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள உண வகத்தில் சாப்பாட்டில் பிளேடு கிடந்தது குறித்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நேரில் ஆய்வுமேற் கொண்டனர். ஆய்வின்போது அங்கு வெள்ளை சாதம் இல்லாத நிலையில் பிளேடு கிடந்தது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. ஊழியர்கள் தலையுறை இன்றியும், சமைக்கும் அறை உரிய பராமரிப்பு இன்றி இருப்பது தெரி யவந்தது. இதுகுறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது தொடர்ந்து 14 நாட்களுக்கு சரிசெய்யு மாறு அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து கங்கா கௌரி உணவகத்தின் 3 கிளைகளின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளோம் என்றார்.
மேலும் 1831 பேர் காவல்துறையில் நியமனம் செய்ய பரிந்துரைகள்
திருவனந்தபுரம், ஜூன் 18- கேரள காவல்துறையில் தற்போதுள்ள 1831 காலியி டங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான பரிந்துரைகளை பிஎஸ்சி அனுப்பத் தொடங்கியுள்ளது. வெள்ளியன்று (ஜூன் 17) 1155 பேருக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டன. சிவில் போலீஸ் அதிகாரி பதவி களுக்கு இந்த நியமனம் செய்யப்படுகிறது. மகளிர் போலீஸ்- 260, கேஏபி- இரண்டு- 294, கேஏபி மூன்று- 257, கேஏபி ஐந்து- 123, எஸ்ஏபி திருவனந்தபுரம்- 221. மீத முள்ளவை இரண்டு நாட்களுக்குள் அனுப்பப்படும். பிஎஸ்சி தேர்வு, ரேங்க் பட்டியல் வெளியீடு மற்றும் பணி நியமன பரிந்துரையை உரிய நேரத்தில் வெளி யிடப்பட்டது.
ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை
திருநெல்வேலி, ஜுன் 18- நெல்லை வண்ணார் பேட்டையை சேர்ந்தவர் அந் தோணி தங்கராஜ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ஜாக்சன் (36). இவர் ஒட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சேரன் மகாதேவி அருகே உள்ள கங்க னாங்குளத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருடன் திரு மணமாகி தற்போது பாளை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மகா ராஜநகர் ரெயில்வே கேட் பகுதிக்கு வந்த ஜாக்சன், திடீ ரென அந்த வழியாக வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஐகிரவுண்டு போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நெல்லை சந்திப்பு ரயில்வே போலீ சார் ஜாக்சன் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்த னர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொ ண்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
நீடாமங்கலத்தில் கலை இலக்கிய இரவு
நீடாமங்கலம், ஜூன் 19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நீடாமங்கலம் கிளை சார்பாக கலை இலக்கிய இரவு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கிளைத் தலைவர் எஸ்.எஸ்.ராமன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ் செல்வன், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆர்.ராம்ராஜ், நீலன் பள்ளி தாளாளர் நீலன் .அசோகன், பேரூராட்சித் துணைத் தலைவர் ஆனந்தமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் ஸ்டா லின் சரவணன் துவக்க உரையாற்றினார். “பெரியோர் எல்லாம் பெரியார் அல்ல” என்ற தலைப்பில் மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா, “எங்கே போகி றோம்” என்ற தலைப்பில் மாநிலத் துணைப் பொதுச்செய லாளர் களப்பிரன், “எண்ணித்துணிக எழுத்து” என்ற தலைப்பில் ரேணுகா மணாளன் ஆகியோர் கருத்துரை யாற்றினர். மாவட்டத் தலைவர் சௌந்தர்ராஜன், மாவட்டச் செய லாளர் வெங்கடேசன், தஞ்சாவூர் மாவட்டச் செயலா ளர் விஜயகுமார், மாவட்டப் பொருளாளர் செல்வராஜ், வழக்கறிஞர் அரசு தாயுமானவன், மாவட்ட துணைத் தலைவர் அம்பிகாபதி ஆகியோர் வாழ்த்திப்பேசினர். காவிரி கலைக்குழுவின் நாட்டுப்புற பாடல்கள், ஆதித் தமிழர் சரவணன் குழுவினரின் கிராமிய தப்பாட்ட கலை நிகழ்ச்சி மற்றும் ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் ,பரதநாட்டியம், காவடியாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எழுத்தாளர் ஐ.வி. நாகராஜன் எழுதிய இரு வேறு இந்தியா என்ற புத்தக வெளியிடப்பட்டது. கவிஞர் வல்லம் தாஜ்பால் தலைமையில் கவிச்சரம் நடைபெற்றது. பல்நோக்கு சேவை இயக்க ஒருங்கிணைப்பாளர் நேரு நடித்த சத்ரபதி சிவாஜி நாடகம் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் அம்பிகாபதி, மாவட்டக்குழு உறுப்பினர் பொன்முடி, கிளை துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. முன்னதாக கிளைச் செயலாளர் சண்முகம் வர வேற்றுப்பேசினார். நிறைவில் கிளை துணைத் தலை வர் ராஜா நன்றி கூறினார்.