districts

img

குறும்பட இயக்குனர்கள், சமூக வலைதள செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் பயாஸ்கோப்

மதுரை, ஜூன் 5-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலை ஞர்கள் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் சமூக வலைதளம் மற்றும் ஊடகத் துறையினரை ஒருங்கிணைக்கும் “பயாஸ்கோப்” கிளை துவக்க நிகழ்ச்சி சனிக்கிழமையன்று வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளி யில் இளங்கோவன் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ஓவியக்கவிஞர் வெண்புறா துவக்கி வைத்து பேசினார். இயக்கு னர், எழுத்தாளர் மதுரைபாலன் சிறப்புரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் அ.ந.சாந்தாராம், மதுரை மாநகர் பெரியார் பற்றாளர் , மணியம்மை தொடக்கப்  பள்ளி தாளாளர் பி.வரதராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கிளைத்தலைவராக இளங்கோவன் கார்  மேகம், செயலாளராக சுதாகரன், பொருளாளராக வெண்ணிலா உள்ளிட்ட 10 பேர் கொண்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் குறும்பட இயக்குனர்கள், சமூக வலைதள செயல்பாட்டா ளர்கள் மற்றும் யூட்யூப் ஒருங்கிணைப்பாளர்கள் பல ரும் கலந்து கொண்டனர்.