சிவகங்கை ஆட்சியரகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, மே 18- அரசு டாஸ்மாக் மதுக்கடையை திறக்க வலியுறுத்தி மே 18 அன்று டாஸ்மாக் ஊழியர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை நகர் பழைய மருத்துவமனை அருகே அரசு டாஸ்மாக் கடை பூட்டப்பட்டுள்ளது. இதன் அருகே ஒரே வளாகத்தில் இருந்து வருகிற தனியார் மனமகிழ் மன்ற மது பானக் கடை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு டாஸ்மாக் கடையை திறக்க வலி யுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு மாறன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் பாண்டி, மாவட்ட நிர்வாகிகள் மெய்யப்பன், கண்ணன், ராஜ்குமார், பெருமாள் , முருகானந்தம் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகி கள் பேசினர்.
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
தேனி, மே 17- சுருளி அருவிக்கு செல்லும் சாலையில் மரக்கிளை கள் அப்புறப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சுருளி அருவி யில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ள னர். கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வரு கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுருளி அருவிக்கு குளிக்க வந்த சென்னை மாணவி மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் அவர் பலியானார். இதனால் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது மரக்கிளைகள் அகற்றப்பட்டன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கினர்.
பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
தேனி, மே 18- வீரபாண்டி திருவிழாவிற்கு வந்த பெண்ணிடம் நகை பறித்த நபரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள் . தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதி யை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சுமதி (33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 4 பேரும் மோட்டார் சைக்கிளில் வீரபாண்டி கவுமாரி யம்மன் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குமுளி புறவழிச்சாலையில் இருந்து தேனி புறவழிச்சாலை செல்லும் சாலையில் சென்ற போது பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் திடீரென சுமதியின் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க தாலிக்கொடியை திருட முயன்றார். ஆனால் அவர் நகையை இறுக்கி பிடித்துக் கொண்டதால் நான்கரை பவுன் நகையை மட்டும் பறித்துக் கொண்டு தப்பி விட்டார். இதுகுறித்து வீரபாண்டி காவல்நிலையத்தில் சுமதி கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.
மனைவியை கொல்ல முயன்ற கணவருக்கு 7 ஆண்டு சிறை'
விருதுநகர், மே 18- மனைவியை கொல்ல முயற்சித்த கணவருக்கு மகிளா சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது அணைகரைப்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்தவர் கனக ராஜ் (38). இவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தே கப்பட்டு கல்லால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள் ளார். இதுகுறித்து க அம்மாபட்டி காவல் நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கானது திருவில்லிபுத்தூர் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி பகவதியம்மாள், குற்wவாளி கனகராஜூக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மனைவியை வெட்டிய கணவன் கைது'
இராமேஸ்வரம், மே 18- இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பழைய மார்கெட் தெருவை சேர்ந்த முத்துகாமாட்சி(50). இவரது மனைவி செல்வி(47). புதன்கிழமை இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திர மடைந்த முத்து காமாட்சி அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளர். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிழே விழுந்தவரை உறவினர்கள் மீட்டு இராமேஸ்வரம் மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பின்னர் இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கோயில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து முத்து காமாட்சியை கைது செய்தனர்.
மே 26 இல் மீனவர் குறைதீர் கூட்டம் இராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு
இராமநாதபுரம், மே.18- இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர் கூட்டம் மே 26 இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வியாழக்கிழமையன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதி களால் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மே மாதம் 26 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்டரங்களில் ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில்,இராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்ள இருப்பதால், இராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெற்றிடு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனு வாக அளித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள லாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டியில் பழைய இரும்பு கடையில் தீ விபத்து
தேனி, மே 18- ஆண்டிபட்டியில் வியாழனன்று பிற்பகலில் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரித்து நாசமானது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தெப்பம்பட்டி சாலை யில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு எதிரே குமரேசன் என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வரு கிறார். வியாழனன்று மதியம் கடையை அடைத்து விட்டு குமரேசன் சாப்பிட சென்றுவிட்டார் .திரும்பி வந்து பார்த்த போது பழைய இரும்பு கடை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது .தகவலறிந்த தீயணைப்பு துறை யினர் போராடி தீயை அணைத்தனர் .கூடுதலாக தேனி யிலிருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .இச்சம்பவத்தில் ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமா னது.
பாலர் பூங்காவின் கோடை சிட்டுகள் பயிற்சி முகாம்
நாகர்கோவில், மே 18 குமரி மாவட்டத்தில் பாலர் பூங்கா அமைப்பு கோடை கால பயிற்சி முகாம்களை சிறார்களுக்காக நடத்தி வரு கிறது. தக்கலையில் புதன், வியாழனில் நடந்த இரண்டு நாள் பயிற்சி முகாமை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் ஏ.வி.பெல்லார்மின் துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் சிறப்புரையாற்றி னார். இந்த முகாம்களை மாவட்ட பாலர் பூங்கா பொறுப்பா ளர் சசி ஒருங்கிணைத்து வருகிறார். மாவட்டத்தில் பயிற்சி பெற்ற பாலர் பூங்கா நிர்வாகிகள் குயிலி, ஜின்சி மாணவர் களுக்கு பயிற்சிகள் வழங்கினார்கள்.
சேகுவேரா நினைவுகள் குறித்த திரைப்படம் திரையிடல்
திருவனந்தபுரம், மே 18- பஹ்மன் தாவூசி இயக்கிய “தி நேம்ஸ் ஆஃப் தி ஃப்ளவர்ஸ்”, பாரத் பவனுடன் இணைந்து கேரள மாநில திரைப்பட அகாடமியால் ஏற்பாடு செய்யப் பட்ட வெள்ளி திரைப்படத் திரையிடலின் ஒரு பகுதி யாக மே 19 வெள்ளியன்று திரையிடப்படும். தைக்காடு பாரத் பவனில் மாலை 6 மணிக்கு நடைபெறும் காட்சியில்18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அனுமதி இலவசம். இந்த படம் 25வது IFFK இல் சிறந்த இயக்குன ருக்கான வெள்ளி விருதை வென்றது. பொலிவியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சி யான இப்படம் பல சர்வதேச விழாக்களில் திரை யிடப்பட்டது. புரட்சியாளர் எர்னஸ்டோ சே குவேரா வின் 50ஆவது ஆண்டு நினைவு நாளில் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அழைக்கப் பட்ட ஒரு வயதான ஆசிரியரின் கதை இது. பொலிவியப் படைகளால் சே குவேராவுக்கு ஒரு கிண்ணம் வேர்க்கடலை சூப் வழங்கப்பட்ட போது பூக்களைப் பற்றிய கவிதையைப் படித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வர லாறு, நினைவாற்றல் மற்றும் உயிர்வாழ்வு பற்றிய கவிதைப் பகுப்பாய்வை இந்தப் படம் முன் வைக்கிறது. படத்தின் கால அளவு 80 நிமிடங்கள்.