மதுரை, மார்ச் 9- காப்பீடு செய்த பிறகு காப்பீட்டு விவரங்களை, காப்பீட்டு நிறு வனத்தின் கணினி ஏற்றுக்கொள்ள வில்லை என்பதற்காக, பாதிக் கப்பட்டவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்காமல் இருப்பது ஏற் புடையது அல்ல சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரி வித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் உசி லைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பா கிறிஸ்மா இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் எனது பாட்டியின், கவ னிப்பில் வளர்ந்து வருகிறேன். எனது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். எனது தாய் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை உதவியா ளராகப் பணிபுரிந்து வந்தார். எனது தாய் கிறிஸ்தியா, புதுக்கோட்டை யில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வீடு கட்ட கடன் கேட்டு விண்ணப்பித்தார். ரூ.11 லட்சத் திற்கு கடன் ஒப்புதல் வழங்கப் பட்டது. இதைத்தொடர்ந்து ரூ.7 லட்சம் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தவணை கடன் தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் எனது தாய், கொரோனா வால் பாதிக்கப்பட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் இறந்து விட்டார். வீடு கட்டுவதற்கு கடன் பெற்ற பொழுது, கடன் தொகைக் கான காப்பீடும் செய்யப்பட்டது. அதற்காக எனது தாய் ரூ.60 ஆயி ரம் காப்பீட்டுத் தொகை செலுத்தி னார். காப்பீடு அடிப்படையில் எனது தாய் பெற்ற கடன் தொகையை காப்பீடு தொகையில் பெற்றுக் கொண்டு முடித்து வைக்க வேண் டும் என வங்கியில் மனுச் செய்தோம். வங்கித் தரப்பில் எனது தாய் செலுத்திய காப்பீட்டுத் தொகை கணினியில் பதிவாகவில்லை. வேறு ஒரு நபரின் பெயரில் காப் பீட்டுப் பணம் செலுத்தப்பட்டுன்னது. எனவே உங்களது தாயின் காப்பீடு செல்லதக்கதல்ல. கடன் பெற்ற தொகையை செலுத்தாத தால் எனது தாய் பெயரில் உள்ள நிலத்தை வங்கி விற்பனை செய்வ தற்கு ஏல அறிவிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஏல அறிவிப்பு நடவடிக்கையை ரத்துச் செய்து உத்தரவிட வேண்டுமென கூறி யுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிர மணியன், விக்டோரியா கௌரி முன் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காப்பீடு எடுத்தவர், காப்பீடு வழங்கியவர் இருவருக் கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட் டுள்ளது. வீடு கட்ட கடன் பெற்றவர் அதே வங்கியில் காப்பீடும் செய்துள்ளார். காப்பீட்டுத் தொகையும் செலுத்தி யுள்ளார். இந்த நிலையில், காப்பீடு எடுத்தவர் மரணம் அடைந்துள் ளார். எனவே, காப்பீடு எடுத்தவரின் குடும்பத்திற்கு உரிய காப்பீடு தொகை வழங்க வேண்டும். கடன் பெற்ற தொகையை காப்பீட்டுத் தொகையில் கழிக்க வேண்டும். காப்பீடு செய்த பிறகு காப்பீடு விவரங்களை காப்பீடு நிறுவ னத்தின் கணினி ஏற்றுக்கொள்ள வில்லை என்பதற்காக, பாதிக்கப் பட்டவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல எனக் கூறி வீடு ஏல அறிவிப்புக்கு இடக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதுகுறித்து புதுக்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பதி லளிக்க உத்தரவிட்டு வழக்கு விசா ரணையை ஒத்திவைத்தனர்.