இராமநாதபுரம், ஆக.8- அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் இராம நாதபுரம் மாவட்ட மாநாடு ஞாயிறன்று இராமநாத புரத்தில் எஸ்.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற் றது. இந்த மாநாட்டில் மாவட்டத் தலைவராக எஸ்.கே.ஜி.விக்ரமன், மாவட்டச் செயலாளராக சந்திர சேகரன், மாவட்டப் பொருளாளராக டி.மாரிமுத்து, மாவட்டத் துணைத் தலைவர்களாக தனபால், சலீம், மாவட்டத் துணைச் செயலாளராக ஜெயமுருகன், நாகேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் மாநிலப் பொதுச் செயலாளர் முத்து அமுத நாதன், மாநிலச் செயலாளர் மதி ஆகியோர் பேசினர்.