districts

img

மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் குப்பை கொட்டுவதை தடுக்க விழிப்புணர்வு கோலம்

திருநெல்வேலி, மே 8- நெல்லை மாநகராட்சி சாலைகளில் குப்பை போடுவதைத் தடுக்க, கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தீவிரம் காட்டுகின்றனர். மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவுபடி மாநகர நல அலு வலர் டாக்டர் ராஜேந்திரன் ஆலோச னைப்படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன் மற்றும் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா ஏற்பாட்டில் பல்வேறு நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்  நிலையில் மேலப்பாளையம்- அம்பை சாலையில் மாநகராட்சி தூய்மை பணி யாளர்கள் குப்பை கொட்டும் இடத்தில் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற் படுத்தினர். நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர் நட ராஜன், உதவி செயற்பொறியாளர் ராம சாமி, நாகராஜன், பொதுசுகாதார குழு  தலைவர் ரம்ஜான் அலி மற்றும் மாநக ராட்சி பணியாளர்கள் உடன் இருந்த னர்.