சின்னாளபட்டி, ஜூலை 15- திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலும் ஒழித்தல் ,மீண்டும் மஞ்சள்பை திட்டத்தினை முன்னெடுத்து செல்லுதல், குப்பைகளை தரம் பிரித்துக் கொடுத்தல் சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு செயல் அலுவலர் விஜயா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சந்திராதேவி வரவேற்று பேசினார். பேரூராட்சி மன்ற தலைவர் அ.சகிலாராஜா, துணைத் தலைவர் ப.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பிளாஸ்டிக் பை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப் பட்டு பேரூராட்சி பகுதியின் பிரதான தெருக்கள் வழியாக தலைவர், செயல் அலுவலர், துணைதலைவர் மன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவர்கள் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.