districts

img

மருத்துவக் காப்பீடு கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், செப். 27- ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட கோ ரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோ வில் வேப்பமூடு சந்திப்பில் கன்னியா குமரி மாவட்ட ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் சிஐடியு மாவட்ட செயலா ளர் பொன்.சோபனராஜ் தலைமை வகித்தார்,  சங்கத்தின் மாவட்ட தலை வர் மரிய ஸ்டீபன், சிவகோபன், சி ஐடியு மாநில உதவி செயலாளர் ஐடா ஹெலன், மாவட்ட செயலாளர் தங்க மோகன், மாவட்ட நிர்வாகிகள் ஜாண்  பேபி,பெஸ்லிபெல், பிரேம் ஆனந்த், சுரேஷ், ஜான் ராஜன், கண்ணன், சுரேந்திரன் ஆகியோர் பேசினர். மோட்டார் வாகன சட்டத்தை நடை முறைப்படுத்தக் கூடாது. ஆட்டோ தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும். 5 லிட்டர் பெட்ரோல், டீசல் தினசரி மானிய விலையில் வழங்க வேண்டும், மாவட்ட மாநில எல்லையில் குறிப்பிட்ட தூரம் செல்ல அனுமதி வழங்க கோரி யும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கெடுத்துக் கொண்டனர்.

;