districts

img

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எதிர்த்து தேனியில் ஆட்டோ தொழிலாளர்கள் நூதன போராட்டம்

தேனி, ஏப்.11- தேனியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, எப்சி கட்டணம், சாலை வரி, வாகன வரி, சுங்க கட்டணம் ஆகியவற்றை உயர்த்திய மோடி அரசின் பாதக செயலை கண்டித்து தேனி மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.முருகவேல் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கண்ணன் துவக்கி வைத்து பேசினார். தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சண்முகம் ஆதரித்து பேசினார். சிஐடியு தேனி மாவட்ட பொதுச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் நிறைவு செய்து பேசினார். கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.