சின்னாளப்பட்டி, மார்ச் 21- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் யூனியனில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியாளர் ச விசாகன் தலைமை தாங்கினார். விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், 100 நாள் வேலைத்திட்டத்தை மேலும் கூடுதலாக்க முயற்சி செய்து வருகிறேன். பெண்கள் சார்ந்து இருக்கின்ற அத்தனைத் திட்டமும் நிறைவேறி வருகிறது. ஆத்தூர் தொகுதியில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும். சித்தையங்கோட்டையில் அனைத்து வீடுகளுக்கும் தண் ணீர் குழாய் பொருத்திட நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டு றவு கலைக்கல்லூரி பணி விரைவில் நிறைவுபெற இருக்கி றது. இஎஸ்ஐ மருத்துவமனை உருவாக்குவதற்கு இடம் பார்த்து கொண்டிருக்கிறோம். சின்னாளப்பட்டி மருத்துவ மனையை மேம்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி முருகேசன். துணைத் தலைவர் ஹேமலதா மணிகண்டன், சின்னாளப்பட்டி பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத்தலைவர் ஆனந்திபாரதிராஜா ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை யான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.